பாட்னா: பீகார் மாநிலத்தில் நடைபெற்ற போலீஸ் வேலைக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கான தேர்வு கடந்த 16 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இரு வாரங்களாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 52 ஆயிரம் பேரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் 1,068 தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் கடந்த வருடம் தேறியதால், அவர்களை உடல் தகுதித் தேர்வுக்கு அழைத்திருந்தனர். பாடலிபுத்ரம் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் நடைபெற்ற இந்தத் தேர்வில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு வேறு நபர்களை அனுப்பியிருந்தது கண்டறியப்பட்டது. இதை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அதிகபட்சமாக கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் சுமார் 200 பேர் ஆள் மாறாட்டத்தி்ல் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீஸாரிடம் கூறிய அவர்கள், “போலீஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்காக தங்களுக்கு பணம் அளித்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபடக் கூறினர்” என்று கூறியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த போலீஸ் அதிகாரி ஒருவர், விசாரணையை தீவிரப்படுத்தும் போது வரும் நாட்களில் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று கூறியுள்ளார். பீகாரில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்களுக்கு அவர்களி்ன் பெற்றோர்கள், உறவினர்கள் காப்பி அடிக்க உதவிய பிரச்னை இன்னும் முடியாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.
போலீஸ் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு: பீகாரில் 1000 பேர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari