January 19, 2025, 3:42 PM
28.5 C
Chennai

போலீஸ் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு: பீகாரில் 1000 பேர் கைது

police-selection-biharபாட்னா: பீகார் மாநிலத்தில் நடைபெற்ற போலீஸ் வேலைக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கான தேர்வு கடந்த 16 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இரு வாரங்களாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 52 ஆயிரம் பேரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் 1,068 தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் கடந்த வருடம் தேறியதால், அவர்களை உடல் தகுதித் தேர்வுக்கு அழைத்திருந்தனர். பாடலிபுத்ரம் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் நடைபெற்ற இந்தத் தேர்வில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு வேறு நபர்களை அனுப்பியிருந்தது கண்டறியப்பட்டது. இதை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அதிகபட்சமாக கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் சுமார் 200 பேர் ஆள் மாறாட்டத்தி்ல் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீஸாரிடம் கூறிய அவர்கள், “போலீஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்காக தங்களுக்கு பணம் அளித்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபடக் கூறினர்” என்று கூறியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த போலீஸ் அதிகாரி ஒருவர், விசாரணையை தீவிரப்படுத்தும் போது வரும் நாட்களில் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று கூறியுள்ளார். பீகாரில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்களுக்கு அவர்களி்ன் பெற்றோர்கள், உறவினர்கள் காப்பி அடிக்க உதவிய பிரச்னை இன்னும் முடியாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.

ALSO READ:  தில்லி சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு; ஈரோடு கிழக்கு தொகுதிக்கும்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசியலமைப்பின் 75ம் ஆண்டு நிறைவு நாளில் பெருமிதம்; மனதின் குரலில் பிரதமர் மோடி!

இந்த முறை மனதின் குரலில் இம்மட்டே.  அடுத்த மாதம் பாரதநாட்டவரின் சாதனைகள், உறுதிப்பாடுகள் மற்றும் வெற்றிகளின் புதிய கதைகளோடு மீண்டும் சந்திப்போம். 

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது