“எப்படி வேலை செய்யறேன்னு பாக்கறேன்…” பெண் தாசில்தாரை மிரட்டிய பஞ்சாயத்து தலைவர் கைது!

Published:

SEDO LADY 1 - 2026

தாசில்தார் விஜயா ரெட்டியை உயிரோடு எரித்துக் கொலை செய்த சம்பவம் நடந்து முடிந்த உடனே மற்றும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நீ, அந்த வேலூருவில் எப்படி வேலை செய்வாய் என்று பார்த்து விடுகிறேன் என தாசில்தாருக்கு சர்பஞ்ச் மிரட்டல் விடுத்ததும், தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப் பட்டு, அவர் கைது செய்யப் பட்டதும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில், தாசில்தார் விஜயாரெட்டி உயிரோடு எரிக்கப் பட்ட அதே நாளில் வரங்கல் அர்பன் மாவட்டத்தில் வேலூரு மண்டல பெண் தாசில்தார் ரஜினியை ஒரு கிராம சர்பஞ்ச் மிரட்டிய செயல் செவ்வாய்க் கிழமை அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்து தாசில்தாரிடமிருந்து புகாரைப் பெற்றுக்கொண்ட ‘சுபேதாரி’ போலீசார், செவ்வாய்க் கிழமை அன்று வழக்குப்பதிவு செய்து பஞ்சாயத்து தலைவரை கைது செய்தனர்.

வரங்கல் புறநகர் மாவட்டம் வேலூரு மண்டலம் ‘மல்லிகுதுர்கா’ கிராம சர்பஞ்ச் ‘கோதுல’ ராஜாரெட்டிதான், பினாமி மூலம் வாங்கி நிலத்தை பட்டா செய்ய வேண்டும் என்று தாசில்தாரை சந்தித்து கோரியுள்ளார். அது மட்டுமன்றி மற்றோர் இடத்திலும் நிலம் வேண்டும் என்று கேட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு அடிக்கடி வந்துள்ளார்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

அதோடு திங்கள் அன்று ஹனுமகொண்டாவில் உள்ள கேஎல்என் ரெட்டி காலனியில் வசித்து வரும் தாசில்தார் வீட்டுக்கு காலை எட்டரை மணிக்கு வந்துள்ளார். மேடத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டபோது தாசில்தாரின் கணவர் ஆபீஸில் சென்று சந்திக்க வேண்டும் என்று கூறி தடுத்தும் கேட்காமல் அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைவதற்கு முயற்சி செய்துள்ளார்.

அவரைத் தடுத்ததால் வெளியில் வந்து நின்ற சர்பஞ்ச், “நீ எப்படி வேலூருவில் வேலை செய்வாய் என்று பார்த்து விடுகிறேன்” என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளார். இந்தச் சூழலில் தாசில்தார் சுபேதார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யவே சர்பஞ்ச் மீது வழக்குப்பதிவு செய்து அவரை செவ்வாய்க் கிழமை போலீஸார் கைது செய்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img