இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உலகின் 6வது படுமோசமான பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா!

kannur communist - 2026

அமெரிக்க வெளியுறவுத்துறை பயங்கரவாதம் குறித்த அறிக்கையை வெள்ளிக்கிழமை இன்று வெளியிட்டுள்ளது, அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உலகின் ஆறாவது அதிபயங்கரமான, பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாதம் 2018 குறித்த அறிக்கையில் கிடைத்த தரவுகளின்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) கடந்த ஆண்டு 177 பயங்கரவாத சம்பவங்களில் 311 பேரைக் கொன்றுள்ளது. எவ்வாறாயினும், 2018 ஆம் ஆண்டில் இந்தக் குழு சம்பந்தப்பட்ட 833 வன்முறை சம்பவங்களில் 240 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு, அமெரிக்க வெளியுறவுத்துறை, 2017 தரவுகளின் அடிப்படையில், மாவோயிஸ்டுகளை உலகின் நான்காவது பெரிய பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

அமெரிக்க அறிக்கை சிபிஐ மாவோயிஸ்டுகளை தலிபான் (ஆப்கானிஸ்தான்), ஐஎஸ்ஐஎஸ், அல்-ஷபாப் (ஆப்பிரிக்கா), போகோ ஹராம் (ஆப்பிரிக்கா) மற்றும் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பின்னர் ஆறாவது இடத்தில் வைத்திருக்கிறது.

moist attack2 - 2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்பது இந்தியாவில் ஒரு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி! இது மக்கள் போரின் மூலம் இந்திய அரசாங்கத்தை கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது செப்டம்பர் 21, 2004 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் போர் (மக்கள் போர் குழு) மற்றும் இந்தியாவின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் (எம்.சி.சி.ஐ) ஆகியவற்றின் மூலம் நிறுவப்பட்டது. சிபிஐ (மாவோயிஸ்ட்) சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தியாவில் ஒரு பயங்கரவாத அமைப்பாகவும் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக்கிற்கு அடுத்தபடியாக உலகளவில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் நான்காவது இடமாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 57 சதவீத பயங்கரவாத சம்பவங்கள் ஜம்மு-காஷ்மீரில் இருந்து பதிவாகியுள்ளன.

அந்த அறிக்கையின்படி, “உளவுத்துறை மற்றும் தகவல் பகிர்வில் உள்ள பலவீனங்கள் மாநில மற்றும் மத்திய சட்ட அமலாக்க அமைப்புகளை எதிர்மறையாக பாதித்தன… இவை இந்தியாவை பயங்கரவாதத் தடுப்பில் ஈடுபடுவதை மட்டுப் படுத்த முயன்றன.

nilgiris moist vigil - 2026

“கடுமையான பயிற்சி இருந்தபோதிலும், என்எஸ்ஜி.,யின் விரைவான பதிலடி ஓரளவு இவற்றை மட்டுப்படுத்தியுள்ளது! இந்த அமைப்பு, இந்தியாவின் பெரிய அளவு மற்றும் என்எஸ்ஜியின் ஆயுத தளவாட திறன் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது சிறிதுதான்!” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த பயங்கரவாத சம்பவங்களில் பிரதான குற்றவாளியாக நக்சல்கள் என்றும் அழைக்கப்படும் சிபிஐ மாவோயிஸ்ட் என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மொத்தம் 176 உயிரிழப்புகளுக்கு இது பொறுப்பாகிறது. இது நிகழ்ந்த அனைத்து பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களின் உயிரிழப்புகளில் 26 சதவீதமாக உள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) 60 உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது. இது அனைத்து சம்பவங்களிலும் 9 சதவீதம். ஹிஸ்புல் முஜாஹிதீன் 59 உயிரிழப்புகளுடன் 9 சத பொறுப்பாளி! லஷ்கர்-இ தயிபா (எல்இடி) 55 உயிரிழப்பு சம்பவங்களில் (8 சதவீத) காரணமாக இருந்தது.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

“அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணி, நாகாலாந்து-இசக்-முய்வா, மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்-ஜம்மு-காஷ்மீர் தேசிய சோசலிச கவுன்சில் போன்ற பிற குழுக்களும் இந்தியாவில் தீவிரமாக செயல்பட்டன” என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

2008 மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட எல்.ஈ.டி தான் காரணம் என்றும், இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் இலக்குகளைத் தாக்கும் “திறனையும் நோக்கத்தையும்” ஜே.எம் வடிவமைத்து செயல்படுத்தியதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

மேலும், 2018 ல் 29 இந்திய மாநிலங்களையும் பயங்கரவாதம் பாதித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு 671 தாக்குதல்களில் 971 பேர் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை கூறுகிறது. 2018 ஆம் ஆண்டில் 111 சம்பவங்களுடன் (16 சதவீதம்) ஜம்மு-காஷ்மீருக்குப் பிறகு மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலம் சத்தீஸ்கர், மணிப்பூர் 22 (3 சதவீதம்) என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மாவோயிச வன்முறையில் இறந்தவர்கள் குறித்த இந்தியாவின் பட்டியல், அமெரிக்காவிலிருந்து ஏன் வேறுபட்டது என்பது குறித்து கருத்து தெரிவிக்க மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories