December 6, 2025, 1:04 PM
29 C
Chennai

ஆர்.டி.ஐ., வரம்புக்குள் தலைமை நீதிபதி அலுவலகம்! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

supreme court of india - 2025

ஆர்.டி.ஐ., – தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் தகவல்களை அளிக்க உத்தரவிட வேண்டும் என எஸ்.சி. அகர்வால் என்பவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தகவல் அதிகாரி, மத்திய தகவல் ஆணையர் அலுவலகம் ஆகியவை விசாரித்தன. தொடர்ந்து, தில்லி உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு கடந்த 2010ல் தீர்ப்பு அளித்தது.

இதன்படி, ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் இடம்பெறும் என தீர்ப்பளிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ranjan gogoi - 2025

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய். சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சிவ் கன்னா அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வருடம் ஏப்.4 ஆம் தேதி, தீர்ப்பு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் புதன்கிழமை இன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. இந்த வழக்கில் தமது தீர்ப்பினை அளித்த தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்திற்கும் பொருந்தும் எனக்கூறியதுடன், தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உறுதி செய்தது.

நீதித்துறையின் சுதந்திரத்தை காரணம் காட்டி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது. பொறுப்பும், சுதந்திரமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 3 பேர் தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தும், 2 பேர் எதிர்ப்பு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்.

  • RTI Act says all public authority comes under the ambit of RTI.
  • Public authority has been defined as one which is (run by or its functioning cost is borne by public money) substantially financed by public money.
  • Apparantly SC structure satisfies this definition of public authority.

RTI in my humble opinion his lordships should have passed the judgement on Day 1 when he took office- Now its like saying I passed the order in the last day – Credit for Making CJI office transparent goes to present outgoing CJI but the burden of legacy pertaining to scrutiny and transparency is passed on to his immediate successor

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories