காதல் காதல்… 7ம் வகுப்பு மாணவியுடன் விஷம் குடித்த கணினி ஆசிரியர்!

Published:

poison 1 - 2026

மாணவியோடு சேர்ந்து விஷம் குடித்தார் ஆசிரியர்… பள்ளியில் இருந்து காரில் ஊர் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்று பிரச்னை ஆனதால்! எல்லாவற்றுக்கும்…. முறை தவறிய காதலே காரணம்!

ஏழாவது வகுப்பு படிக்கும் மாணவியுடன் சேர்ந்து அதே பள்ளியில் பணிபுரியும் கணினி வகுப்பாசிரியர் விஷம் குடித்தார். இருவரின் நிலையும் மோசமாக உள்ளது. விகாராபாதில் திங்களன்று இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சங்காரெட்டி மாவட்டம் ஜோகிபேட்டையில் ஓர் அரசு பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணிபுரியும் ஸ்ரீசைலம் என்பவர் ஏழாம் வகுப்பு மாணவியை காதலிப்பதாகக் கூறி பின் தொடர்ந்துள்ளார்.

திங்கள் கிழமை மதியம் பள்ளியில் இருந்து அந்த மாணவியை காரில் ஏற்றிக்கொண்டு விகாராபாதுக்கு வந்துள்ளார். அங்கே அவர்கள் இருவரும் பூச்சி மருந்து குடித்துள்ளனர். மயங்கிய நிலையில் கிடந்த அவர்களை அந்த வழியே சென்ற சிலர் கவனித்து விகாராபாத் மிஷனரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

teacher poisoned - 2026

அந்த மாணவியைத் தாம் காதலிப்பதாக மருத்துவரிடம் ஸ்ரீசைலம் கூறியதாகத் தெரிகிறது. மாணவியின் பெற்றோர் இந்தச் சம்பவம் குறித்து ஜோகிபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

அதே நேரம், ஶ்ரீசைலத்தின் பெரியப்பா ஜோகிபேட்டையில் அதிகாரத்தில் உள்ள கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் என்பது தெரிய வந்துள்ளது!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img