பைக்கில் அதிவேகம்… பஸ்ஸில் மோதி மரணம்!

Published:

hyderabad accident - 2026

ஆர் டி சி பஸ்ஸின் பின் சக்கரங்களில் நசுங்கி இளைஞன் மரணம் அடைந்துள்ளார். ஹைதராபாத் ‘மலக்பேட்’ டில் நடந்த சாலை விபத்தில் ஒரு இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

பைக் மீது வேகமாக வந்து நிலைதடுமாறி ஆர்டிசி பஸ்ஸை இடித்ததால் இந்த விபத்து நேர்ந்தது. பஸ்ஸின் பின் சக்கரங்களின் கீழ் நசுங்கி அங்கேயே உயிர் பிரிந்தது.

விபத்துக்கு அதிவேகமே காரணம் என்று தெரிகிறது. அடிக்கடி அதே இடத்தில் விபத்துகள் நடப்பதாக அங்கு உள்ளவர்கள் தெரிவித்தனர். மரணித்தவர் ‘நாகோலை’ச் சேர்ந்த சந்திரசேகர் (20) என்று அறியப்பட்டது.

அவர் தன் கிளாமர் பைக் மீது மிக வேகமாகச் சென்று ‘தில்ஷுக்நகர்’ டிப்போவைச் சேர்ந்த ஆர்டிசி பஸ்ஸை பின்னாலிருந்து மோதினார் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மலக்பேட் ‘முசாராம்பாக் ‘ நாற்கூடலியில் நவ.12 செவ்வாய் காலையில் இந்த விபத்து நடந்துள்ளது. செய்தி அறிந்த மலக்பேட் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு வந்து உடலை போஸ்ட் மாற்றத்திற்கு உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img