விபத்தில் சிக்கிய நடிகர் கார்! ஏர்பலூன்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்..?!

Published:

rajasekar actor - 2026

என்ன நடந்தது ? நடிகர் ராஜசேகர் விளக்கம். கார் விபத்தில் தனக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் நலமாக இருப்பதாகவும் ஹீரோ டாக்டர் ராஜசேகர் தெரிவித்தார்.

மேலும், அந்த விபத்து நடந்த போது தான் ஒருவரே காரில் இருந்ததாக கூறினார். ஆனால், விபத்துக்கான காரணத்தை அவர் கூறவில்லை. இருப்பினும், அதி வேகமே காரணம் என்று போலீசார் தெரிவித்தனர்.

புதன்கிழமை ராஜசேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “செவ்வாய் இரவு இரண்டரை மணி அளவில் ராமோஜி பிலிம் சிட்டியில் இருந்து வீட்டுக்கு வரும்போது அவுட்டர் ரிங் ரோடில் ‘பெத்த கோல்கொண்டா ஜங்ஷன்’ அருகில் என் கார் விபத்துக்குள்ளானது.

rajasekar actor accident - 2026

எதிரில் வந்த காரில் இருந்தவர்கள் தங்கள் காரை நிறுத்தி என் கார் அருகில் வந்தனர். காருக்குள் இருப்பது நான் என்று அறிந்து ‘வின் ஷீல்ட் ‘ உள்ளே இருந்து என்னை வெளியே எடுத்தார்கள்.

நான் உடனே அவர்களிடம் இருந்து போனை வாங்கி போலீசாருக்கும் வீட்டுக்கும் தகவல் தெரிவித்தேன். அங்கிருந்து அவர்கள் காரிலேயே வீட்டுக்குக் கிளம்பினேன். ஜீவிதாவும் என் குடும்பத்தினரும் எதிரில் வந்து என்னை பிக்கப் செய்து கொண்டார்கள். எனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை” என்றார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

ராஜசேகரின் கார் விபத்து குறித்து ஷம்ஷாபாத் போலீசார் கூறியபோது… அவுட்டர் ரிங் ரோடில் பெத்த கோல்கொண்டா டோல்கேட் அருகில் கார் நிலை தடுமாறி குப்புற கவிழ்ந்தது என்று ஷம்ஷாபாத் ரூரல் சிஐ வெங்கடேஷ் தெரிவித்தார். அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் டிரைவ் செய்ததால் விபத்து நடந்ததாக கூறினார். அங்கிருந்து காரை காவல்நிலையத்துக்கு அனுப்பினார்… என்றார்.

போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கார் முழுமையாக பழுதடைந்த நிலையில் விலை உயர்ந்த காரில் இருந்த ஏர்பலூன்களால் ஹீரோ ராஜசேகர் மயிரிழையில் காப்பாற்றப் பட்டார் என்பது தெரிகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img