கணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்!

IMG 20191116 WA0033 - 2026

கணித மேதை ‘பீகாரின் ஐன்ஸ்டின்’ வசிஷ்ட நாராயண் சிங் காலமானார்! அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

வசிஷ்ட நாராயண் சிங் ஒரு குழந்தை மேதையாக பள்ளியிலும் கல்லூரி யிலும் அடையாளம் காணப்பட்டார்.

ஐன்ஸ்டீன் கொள்கையை கேள்வி கேட்டு சவால்விட்ட விஞ்ஞானி வசிஷ்ட நாராயண் சிங், பீகார் ஐன்ஸ்டின் என்று புகழப்பட்டார்.

வசிஷ்ட நாராயண் சிங் சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.

நவம்பர் 14 வியாழன் காலையில் பாட்னா மருத்துவமனையில் மரணம் அடைந்த அவருடைய உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் உறவினர்கள் மாலை வரை மருத்துவமனை வளாகத்தில் வருத்தத்தோடும் அவமானத்தோடும் காத்திருக்க நேர்ந்தது.

பீகாரில் இதுபோன்று இறந்தவர்கள் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலைமை புகழ்பெற்ற இந்த கணித மேதைக்கு மட்டுமல்ல…. பலருக்கும் நேர்ந்து வருகிறது. ஆளும் அரசின் மீது விமர்சனங்கள் கூட எழுந்துள்ளன.

இந்தியாவில் பிறந்த இதுபோன்ற மேதைகளுக்கு நாம் அளிக்கும் கவுரவம் இதுதானா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

வசிஷ்ட நாராயண் தன்னிகரில்லாத மேதாவி என்று புகழாரம் சூட்டிய மாநில அரசு, அவருடைய கணித அறிவின் முன் உலகம் மண்டியிட்டது என்று குறிப்பிட்டது.

வசிஷ்ட நாராயண் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குறிப்பிட்டார். அவருடைய வீட்டுக்குச் சென்று குடும்பத்தாரிடம் முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்த தோடு நாராயண் சிங் இறுதிச்சடங்கை அரசு மரியாதையுடன் நடத்தி வைத்தார்.

1942 ஏப்ரல் 12ல் பீகாரில் பசந்த்பூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார் வசிஷ்ட நாராயண். கடந்த நாற்பதாண்டுகளாக ‘ஸ்கிஜோப்ரினியா’ என்ற மனச் சிதறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த சில மாதங்களாக பாட்னா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

பீகாரில் ஆரம்ப கல்வியை முடித்த வசிஷ்ட நாராயணா பாட்னா அறிவியல் கல்லூரியில் மேற்படிப்பு முடித்து 1965இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பிஹெச்டி தேறினார்.

நாசாவில் ஸ்பேஸ் தியரி பற்றி ஆராய்ந்தார். அதன்பின் ஐஐடி கான்பூர் மற்றும் இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் இன்ஸ்டிட்யூட் கொல்கத்தா ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றினார்.

பிஎன் மண்டல் யுனியில் விசிடிங் பேராசிரியராக இருந்தார்.

இத்தகைய சிறந்த விஞ்ஞானிக்கு எந்த அரசாங்க அமைப்பும் ஆதரவு அளிக்காதது துரதிருஷ்டமே!

அவருக்கு ஏற்பட்ட மனச் சிதறல் நோய் காரணமாக அவருடைய மனைவி அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

மிகுந்த நிராகரிப்புக்கு உள்ளான இந்த மேதை ஒருமுறை மருத்துவமனையில் இருந்து காணாமல் சென்று சில ஆண்டுகளுக்குப் பின் குப்பைகளை கிளறிக் கொண்டிருக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories