December 5, 2025, 5:19 PM
27.9 C
Chennai

பெண்கள் என்றால் அத்தனை இளக்காரமா? சிலுக்கூரு அர்ச்சகர் ரங்கராஜன் வருத்தம்!

silukur rangarajan4 - 2025

பெண்கள் என்றால் அத்தனை இளக்காரமா? சிலுக்கூரு அர்ச்சகர் ரங்கராஜன் வருத்தம்!

நம் நாட்டில் பெண்கள் என்றால் அத்தனை இளக்காரமா என்று சிலுக்கூரு ஆலய அர்ச்சகர் ரங்கராஜன் மனவேதனை வெளியிட்டார். நமக்கு பெண்களை மதிக்கத் தெரியாதா? என்று கேட்டார்.

விவாத மேடைகள் சோசியல் மீடியா போஸ்டர்களிலாவது கொஞ்சம் கவனமாக பேச முயற்சிக்க வேண்டும் என்று கோரினார். சம்ஷாபாத் பரபரப்பு பெண் கொலை பற்றி அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

silukur rangarajan5 - 2025

நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சம்ஷாபாத் பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் பெரும் மன வேதனை அடைந்ததாக, கடந்த வாரம் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரைச் சந்தித்து பேசிய போது தெரிவித்தார். கொலையான அந்தப் பெண்ணுக்கு தனது சிரத்தாஞ்சலியைக் காணிக்கை ஆக்கினார்.

அதன் பின்னர் அர்ச்சகர் ரங்கராஜன் பேசிய போது, லட்சுமணனை நாம் எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். ஏன் தெரியுமா? அவன் எப்போதும் சீதா தேவியின் பாதங்களை மட்டுமே பார்த்துப் பேசுவான். பிற பெண்களை தாயாகப் பார்த்த தேசம் நம்முடையது என்றார்.

silukur rangarajan3 temple - 2025

“கல்வியோடு கூட ஒழுக்கங்களையும் கற்றுத்தர வேண்டிய முக்கிய பாத்திரம் ஆண்களைப் பெற்றோருக்கு உள்ளது. பெண்களை விளையாட்டுப் பொருளாக பார்ப்பவர்களை இனி “ராபாசுரர்கள்’ என்று அழைக்கவேண்டும். அப்படிப் பட்டவர்களை தூக்கில் போடவேண்டும்.

திசா சம்பவத்திற்குப் பின் பல இளகிய மனம் படைத்தவர்களும் இதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். ராமாயணத்தில் சீதையை அபகரித்துச் சென்ற ராவணாசுரனுடன் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய ஜடாயு போன்ற மக்களின் தேவை நம் சமுதாயத்திற்கு உள்ளது.

silukur rangarajan2 rakshabandan - 2025

பெண்களுக்கு பாதுகாப்பாக நம் நாட்டில் நிறைய அமைப்புகள் உள்ளன. ஆனால் அவை தாமாக வந்து பெண்களை காப்பதில்லை. திஷாவின் பெற்றோருடன் பேசுவதற்கு எனக்கு பேச்சே வரவில்லை” என்று வருத்தம் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் சமுதாயம் மொத்தமும் அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறினார். இந்தச் சம்பவத்தில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீசாரைப் பாராட்டினார். இருப்பினும் அவர்கள் இன்னும் பொறுப்போடு நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

silukur rangarajan1 - 2025

பெண்களைப் பெற்றோர் பெண்களுக்கு எச்சரிக்கையாக இருப்பது குறித்து கற்றுத் தருகிறார்கள். ஆனால் இளைஞர்களை பெற்றோர் இன்னும் சிரத்தை வகிக்க வேண்டிய தேவையுள்ளது.

உங்கள் மகன்களை டிகிரி படிக்க வைப்பதற்கு முன் பெண்களை கௌரவிக்க கற்றுத் தாருங்கள். இது உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று என்று குறிப்பிட்டார்.

silukur rangarajan6 - 2025

சிலுக்கூரு வேங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் பெண்களை கௌரவிப்பதற்காக வருடா வருடம் கன்யா வந்தனம், ரக்ஷாபந்தன் போன்ற வழிபாடுகளை நடத்துகிறோம் என்றார்.

சென்ற சனிக்கிழமை திசா கொலையை எதிர்த்து ஆலயத்தில் தரிசனம், பிரதட்சிணம் ஆகியவற்றை நிறுத்தி வைத்து சமுதாய துக்கத்தில் நாங்களும் பங்கேற்றோம் என்றார் ரங்கராஜன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories