பெண்கள் என்றால் அத்தனை இளக்காரமா? சிலுக்கூரு அர்ச்சகர் ரங்கராஜன் வருத்தம்!

silukur rangarajan4 - 2026

பெண்கள் என்றால் அத்தனை இளக்காரமா? சிலுக்கூரு அர்ச்சகர் ரங்கராஜன் வருத்தம்!

நம் நாட்டில் பெண்கள் என்றால் அத்தனை இளக்காரமா என்று சிலுக்கூரு ஆலய அர்ச்சகர் ரங்கராஜன் மனவேதனை வெளியிட்டார். நமக்கு பெண்களை மதிக்கத் தெரியாதா? என்று கேட்டார்.

விவாத மேடைகள் சோசியல் மீடியா போஸ்டர்களிலாவது கொஞ்சம் கவனமாக பேச முயற்சிக்க வேண்டும் என்று கோரினார். சம்ஷாபாத் பரபரப்பு பெண் கொலை பற்றி அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

silukur rangarajan5 - 2026

நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சம்ஷாபாத் பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் பெரும் மன வேதனை அடைந்ததாக, கடந்த வாரம் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரைச் சந்தித்து பேசிய போது தெரிவித்தார். கொலையான அந்தப் பெண்ணுக்கு தனது சிரத்தாஞ்சலியைக் காணிக்கை ஆக்கினார்.

அதன் பின்னர் அர்ச்சகர் ரங்கராஜன் பேசிய போது, லட்சுமணனை நாம் எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். ஏன் தெரியுமா? அவன் எப்போதும் சீதா தேவியின் பாதங்களை மட்டுமே பார்த்துப் பேசுவான். பிற பெண்களை தாயாகப் பார்த்த தேசம் நம்முடையது என்றார்.

silukur rangarajan3 temple - 2026

“கல்வியோடு கூட ஒழுக்கங்களையும் கற்றுத்தர வேண்டிய முக்கிய பாத்திரம் ஆண்களைப் பெற்றோருக்கு உள்ளது. பெண்களை விளையாட்டுப் பொருளாக பார்ப்பவர்களை இனி “ராபாசுரர்கள்’ என்று அழைக்கவேண்டும். அப்படிப் பட்டவர்களை தூக்கில் போடவேண்டும்.

திசா சம்பவத்திற்குப் பின் பல இளகிய மனம் படைத்தவர்களும் இதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். ராமாயணத்தில் சீதையை அபகரித்துச் சென்ற ராவணாசுரனுடன் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய ஜடாயு போன்ற மக்களின் தேவை நம் சமுதாயத்திற்கு உள்ளது.

silukur rangarajan2 rakshabandan - 2026

பெண்களுக்கு பாதுகாப்பாக நம் நாட்டில் நிறைய அமைப்புகள் உள்ளன. ஆனால் அவை தாமாக வந்து பெண்களை காப்பதில்லை. திஷாவின் பெற்றோருடன் பேசுவதற்கு எனக்கு பேச்சே வரவில்லை” என்று வருத்தம் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் சமுதாயம் மொத்தமும் அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறினார். இந்தச் சம்பவத்தில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீசாரைப் பாராட்டினார். இருப்பினும் அவர்கள் இன்னும் பொறுப்போடு நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

silukur rangarajan1 - 2026

பெண்களைப் பெற்றோர் பெண்களுக்கு எச்சரிக்கையாக இருப்பது குறித்து கற்றுத் தருகிறார்கள். ஆனால் இளைஞர்களை பெற்றோர் இன்னும் சிரத்தை வகிக்க வேண்டிய தேவையுள்ளது.

உங்கள் மகன்களை டிகிரி படிக்க வைப்பதற்கு முன் பெண்களை கௌரவிக்க கற்றுத் தாருங்கள். இது உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று என்று குறிப்பிட்டார்.

silukur rangarajan6 - 2026

சிலுக்கூரு வேங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் பெண்களை கௌரவிப்பதற்காக வருடா வருடம் கன்யா வந்தனம், ரக்ஷாபந்தன் போன்ற வழிபாடுகளை நடத்துகிறோம் என்றார்.

சென்ற சனிக்கிழமை திசா கொலையை எதிர்த்து ஆலயத்தில் தரிசனம், பிரதட்சிணம் ஆகியவற்றை நிறுத்தி வைத்து சமுதாய துக்கத்தில் நாங்களும் பங்கேற்றோம் என்றார் ரங்கராஜன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories