தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தனித்துவம்: பெண் விவசாயிக்கு உடனடி உதவி!

Published:

tamilisai soundarrajan - 2026

தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தனித்துவம்: பெண் விவசாயிக்கு உடனடி உதவி; பட்டாதாரருக்கு பாஸ் புத்தகம் வினியோகம்!

தெலங்காணா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தன் பார்வைக்கு வந்த மக்கள் பிரச்னைகளை நேராக தீர்த்து வைத்து தன் தனித்தன்மையை நிரூபித்து வருகிறார். அண்மையில் நடந்த ஒரு சம்பவமே இதற்குச் சான்று.

நிஜாமாபாத் மாவட்டம் போதன் மண்டலம் பெண்டகலான் கிராமம் பூலட்சுமி கேம்ப்பைச் சேர்ந்த சீதாராமம்மாவின் கணவர் ராமிரெட்டி மரணமடைந்ததால் அவர் பெயரில் இருந்த 4.30 ஏக்கர் நிலத்தை ‘விலாசத்’ பரம்மரை உரிமை செய்ய வேண்டுமென்று தாசில்தாருக்கு விண்ணப்பித்தார்.

சர்வே நம்பரில் விஸ்தீரணம் அதிகரித்துள்ளது என்றும் சரி செய்யும் வரை பாஸ் புத்தகம் கொடுக்க இயலாது என்றும் ஒரு வருடம் காத்திருக்கும்படியும் தாசில்தார் கூறினர்.

ஆர்டிஓ விடம் சென்றபோது, “உன் ஒருத்தர் வேலையை மட்டுமே செய்ய வேண்டுமா? எங்களுக்கு வேற நிறைய வேலை இருக்கு” என்று எரிந்து விழுந்தார்.

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

கலெக்டரேட்டில் நடக்கும் பிரஜாவாணியில் கலெக்டரிடம் மனு அளித்தார் சீதாராமம்மா. இவ்வாறு ஐந்து மாதங்களாக ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து வருகிறார்.

சோர்ந்துபோன சீதாராமம்மாவின் மகன் வெங்கடேஸ்வரரெட்டி கவர்னர் தமிழிசைக்கு போன் செய்தார். கவர்னர், ராஜ்பவன் காரியதரிசி சுரேந்திரமோகனுக்கு ஆணையிட்டார். அவர் மாவட்ட கலெக்டரோடு பேசி சீதாராமம்மாவை வரவழைத்தார்.

கலெக்டர் தன் விரல் முத்திரையோடு ம்யூடேஷன் பத்திரங்களில் கையெழுத்து செய்து அப்போதைக்கு அப்போதே பாஸ் புத்தகம் ஜெராக்ஸ் எடுத்து விவசாயிக்கு அளித்தார். எல்லாம் கிடுகிடுவென்று நடந்தேறின. மூன்று நாட்களிலேயே வேலை முடிந்தது.

இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆளுநர் தமிழிசை ப்ரஜா தர்பார் நடத்தி வருகிறார். மக்கள் மனதில் இடம் பிடித்தும் வருகிறார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img