படபட பட்டாஸாய் சட்டமன்றம்… ‘கொர்’ என தூங்கி வழிந்த ஜெகன்!வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

Published:

jagan sleep assembly - 2026

ஆந்திர மாநில அசெம்பிளியில் தூங்கி வழிந்த ஜகன். போட்டோ வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் மூன்று தலைநகர்கள் மீது முக்கியமான விவாதம் நடைபெற்று வந்த தருணத்தில் முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன் உறங்கி வழிந்தார். மாநிலம் கொந்தளிக்கும் போது இந்த மனிதருக்கு உறக்கம் எவ்வாறு வருகிறது? என்று முன்னாள் அமைச்சர் நாரா லோகேஷ் ட்வீட் செய்துள்ளார் .

ஏபி அசெம்பிளியில் ஒய்சிபி எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் ஒருவர்பின் ஒருவராக உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் தருணத்தில் முதல்வர் ஜெகன் தலைகுனிந்து தூங்கினார்.

ஒருபுறம் தலைநகர் மீது அசெம்பிளியில் முக்கிய விவாதம். வெளியே தலைநகர் விவசாயிகளின் தீவிர போராட்டம். இந்தப் பின்னணியில் மாநிலம் மொத்தமும் அசெம்பிளி கூட்டத்தொடரை ஆர்வத்தோடு கவனித்து வருகிறது.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

அதே போல் அரசியல் தலைவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் எதிர்க்கட்சியினர் கவனித்து வருகின்றனர்.

https://twitter.com/NRI_Uganda/status/1219157227346354177

இவ்வாறு இருக்கையில் முதல்வர் ஜெகன் தூங்கி வழிந்தது பற்றி எதிர்கட்சியினர் ஏளனம் செய்து வருகின்றனர். அந்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விவசாயிகளுக்கு உறக்கம் இல்லாமல் செய்து விட்டீர்கள். உங்களுக்கு மட்டும் எப்படி எங்குவேண்டுமானாலும் தூக்கம் வருகிறது? என்று நெட்டிசன்கள் ட்வீட்டி வருகிறார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img