நான் நாட்டிலேயே இளமையான ஆளுநர் என்று தெலங்காணா ஆளுநர் தமிழிசை ஆர்வமூட்டும் கருத்து தெரிவித்தார்.
அப்போலோ போரன்சிக் மாநாட்டில் பங்கு கொண்ட தமிழிசை இந்த சபைக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். போரென்சிக் ஆதாரங்கள் நீதித் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார். ஹைதராபாத் பிரியாணிக்கு தான் நன்கு பழக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார் தமிழிசை.
இளைய ஆளுநராகவும் மருத்துவராகவும் இருப்பதால் சிறு குழந்தையைப் போல் இளைய மாநிலமாக தெலங்காணாவை கவனமாகக் கையாளுவேன் என்றார் தமிழிசை சௌந்தர்ராஜன்.