விசாகப்பட்டினம் சாரதா பீட யாகத்தில்… ஆளுநர் தமிழிசை!

Published:

tamilisai vizag yaga - 2026

விசாகப்பட்டினம் ஸ்ரீ சாரதா பீடத்தில் தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பூஜைகளில் கலந்து கொண்டார். அடுத்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திங்களன்று விசாகா சாரதா பீடத்தை தரிசித்தார்.

ஸ்ரீசாரதா பீடத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த ஐந்து நாட்களாக பல ஆன்மிக நிகழ்ச்சிகளை மடத்தில் நடைபெற்றன. திங்கள் கிழமை அன்று நடந்த ராஜஷ்யாமளா யாகத்தின் பூரணாஹுதி நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் ஜகன், தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை, பிஜேபி தலைவர் சுப்பிரமணியம், தெலங்காணா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாசயாதவ் உட்பல பலர் பங்கேற்றனர்.

இந்த பீடத்துக்கு வந்திருந்து ஸ்ரீ சொரூபானந்த சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்ற மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், அவருக்கு மரியாதை செய்தார்.

ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு பல்வேறு பிரச்னைகளில் மக்களிடமிருந்து எதிர்ப்பு வந்த வண்ணம் உள்ளது. பீடத்தின் அருகில் சிலர் சாலையோரம் நின்று ஜெகன் கான்வாய் செல்லும்போது பிளே கார்டுகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் விசாகா சாரதா பீடத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் பங்குகொண்டு சிறப்பு பூஜைகள் செய்தார். விஸ்வ சாந்தி மகா யாகத்தில் பங்கு கொண்டார். முதலமைச்சர் என்ற பதவியுடன் தனது வெற்றிக்காக யாகங்கல் செய்த ஸ்ரீசாரதா பீடத்துக்கு இரண்டாவது முறையாக வந்து, வேத பண்டிதர்களின் பூரண கும்ப வரவேற்பு மரியாதைப் பெற்றார் ஜெகன்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
jagan swani - 2026

சாரதா பீடம் ஆண்டு விழாவில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. ராஜசியாமளா தேவி சிறப்பு பூஜையில் முதலமைச்சர் ஜெகன் பங்கேற்றார். ஸ்வரூபானந்த ஸ்வாமிகளோடு சேர்ந்து ஜகன் கோ பூஜையும் செய்தார். வன்னி மரத்திற்கு பூஜை செய்து தேங்காய் உடைத்து வழிபட்டார்.

jagan swarupananda - 2026

முன்னதாக ஆந்திர முதல்வராக வெற்றி பெற்றிருந்த பின்னர் முதல்முறையாக இந்த பீடத்துக்கு வந்த போது, சொரூபானந்த சரஸ்வதி சுவாமிகள் ஜெகனுக்கு முத்தமிட்டு வரவேற்று ஆசி கூறியிருந்தார். அது அப்போது பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img