மணமேடையில… பொண்ணு கட்டியிருந்த புடவை புடிக்கலைன்னு… காதலியை கழட்டிவிட்டுட்டு போயிருக்கானே…!!

marriage kalyanam - 2026

மணப்பெண் அணிந்திருந்த புடைவையின் தரம் சரியாக இல்லை; அதை மாற்றி விட்டு வா என்று கூறியும், மணப்பெண் அதை மாற்றிக் கொண்டு வராததால் கோபமடைந்த மணமகன் வீட்டார் கல்யாணத்தையே நிறுத்திவிட்டு, காணாமல் போய் விட்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தச் சம்பவம்.

கர்நாடக மாநிலம், ஹசன் நகருக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுகுமார். இவர் சங்கீதா என்ற பெண்ணைக் காதலித்துள்ளார். இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, திருமண பந்தத்தில் இணைவதற்கு தயாராகினர்.

ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி, தாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்த நிலையில், தங்களது திருமண வாழ்க்கை முடிவு குறித்து தங்கள் வீட்டில் பேசியுள்ளனர். தொடர்ந்து இருவரும் அவரவர் வீட்டில் சம்மதம் பெற்று, திருமண ஏற்பாடுகளில் மூழ்கினர்.

இந்நிலையில், திருமண நாள் அன்று திருமணச் சடங்கின் போது சங்கீதா அணிந்திருந்த புடைவை சரியில்லை, அதன் தரம் சரியில்லை என்றெல்லாம் கூறிய மணமகன் ரகுகுமாரின் பெற்றோர், அந்தப் புடைவை தங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறி, அதனை மாற்றிவிட்டு வேறு புடைவை கட்டிக் கொண்டு வருமாறு கூறினர்.

ஆனால் மணப்பெண் சங்கீதாவோ, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ரகுகுமாரின் பெற்றோர், உடனே திருமணத்தை நிறுத்துவதாகக் கூறி, ரகுகுமாரிடம் கூறியுள்ளனர். பெற்றோர் கூறிய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, வேறு எதுவும் பேசாமல், ரகுகுமாரும் அமைதியாக எழுந்து அங்கிருந்து சென்றுவிட்டாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் சங்கீதாவின் உறவினர்கள் இதுகுறித்து புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர். இதை அடுத்து, ச்ங்கீதாவின் பெற்றோர் மோசடி செய்ததாக போலீஸில் புகார் அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சங்கீதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரின் ரகுகுமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரம், ரகுகுமார் மற்றும் பெற்றோர் தலைமறைவாகிவிட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories