மணமேடையில… பொண்ணு கட்டியிருந்த புடவை புடிக்கலைன்னு… காதலியை கழட்டிவிட்டுட்டு போயிருக்கானே…!!

marriage kalyanam - 2026

மணப்பெண் அணிந்திருந்த புடைவையின் தரம் சரியாக இல்லை; அதை மாற்றி விட்டு வா என்று கூறியும், மணப்பெண் அதை மாற்றிக் கொண்டு வராததால் கோபமடைந்த மணமகன் வீட்டார் கல்யாணத்தையே நிறுத்திவிட்டு, காணாமல் போய் விட்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தச் சம்பவம்.

கர்நாடக மாநிலம், ஹசன் நகருக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுகுமார். இவர் சங்கீதா என்ற பெண்ணைக் காதலித்துள்ளார். இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, திருமண பந்தத்தில் இணைவதற்கு தயாராகினர்.

ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி, தாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்த நிலையில், தங்களது திருமண வாழ்க்கை முடிவு குறித்து தங்கள் வீட்டில் பேசியுள்ளனர். தொடர்ந்து இருவரும் அவரவர் வீட்டில் சம்மதம் பெற்று, திருமண ஏற்பாடுகளில் மூழ்கினர்.

இந்நிலையில், திருமண நாள் அன்று திருமணச் சடங்கின் போது சங்கீதா அணிந்திருந்த புடைவை சரியில்லை, அதன் தரம் சரியில்லை என்றெல்லாம் கூறிய மணமகன் ரகுகுமாரின் பெற்றோர், அந்தப் புடைவை தங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறி, அதனை மாற்றிவிட்டு வேறு புடைவை கட்டிக் கொண்டு வருமாறு கூறினர்.

ஆனால் மணப்பெண் சங்கீதாவோ, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ரகுகுமாரின் பெற்றோர், உடனே திருமணத்தை நிறுத்துவதாகக் கூறி, ரகுகுமாரிடம் கூறியுள்ளனர். பெற்றோர் கூறிய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, வேறு எதுவும் பேசாமல், ரகுகுமாரும் அமைதியாக எழுந்து அங்கிருந்து சென்றுவிட்டாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் சங்கீதாவின் உறவினர்கள் இதுகுறித்து புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர். இதை அடுத்து, ச்ங்கீதாவின் பெற்றோர் மோசடி செய்ததாக போலீஸில் புகார் அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சங்கீதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரின் ரகுகுமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரம், ரகுகுமார் மற்றும் பெற்றோர் தலைமறைவாகிவிட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories