December 6, 2025, 3:57 PM
29.4 C
Chennai

நிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம்! அடேங்கப்பா முரத் அலி! ஆனாலும் சிக்கிட்டானே..!

ponmf97o currency hidden in peanuts cisf twitter - 2025

காப்பானுக்கு ஆயிரம் வழி என்றால் கள்ளனுக்கு லட்சம் வழியாயிருக்கிறது. எப்படி எல்லாம் பணத்தை, போதைப் பொருள்களை, கடத்தல் பொருள்களை சுங்கத்துறையினர் கண்களில் படாமல் மறைத்து கடத்தி வரலாம் என்று திட்டம் தீட்டி கள்ளத்தனம் செய்பவர்கள் செயல்படுகையில், சில நேரங்களில் எப்படியாவது மாட்டி விடுகிறார்கள்.

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விமான நிலையம்தான். இங்கே புதன்கிழமை துபையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். அப்போது, முரத் அலி என்ற இளைஞரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமாக இருந்தது.

இதனால் உஷார் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தனியாக அழைத்துச் சென்று துருவித் துருவி விசாரணை செய்ததுடன், தனிப்பட்ட வகையில் சோதனையும் செய்தனர். ஆனாலும், அவரிடம் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

வெறுத்துப் போன அதிகாரிகள், அவர் கொண்டு வந்த பொருட்களை சோதித்தனர். ஆனால், அதிலும் வெறும் நிலக்கடலை, சமைத்த ஆட்டுக்கறி, பிஸ்கட் இவை மட்டுமே இருந்தது. ஆனாலும், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு முரத் அலி மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

திடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

முழு நிலக் கடலையை அவர் உடைத்துப் பார்த்துள்ளார். ஆனால் அதற்குள் கடலைப் பருப்புக்கு பதிலாக, வெளிநாட்டு கரன்சி இருந்துள்ளது. பிஸ்கட் பாக்கெட்டை பிரித்தால் அதற்குள் முன்னும் பின்னும் முழு பிஸ்கட்டை வைத்தும், அதற்கு கீழ் துளையிட்டு வெளிநாட்டு கரன்சி வைக்கப் பட்டும் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதே போல், சமைத்த ஆட்டுக்கறியை பிரித்துப் பார்த்தால் அதற்குள்ளும் வெளிநாட்டு கரன்சி இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், இந்த வழிகளில் எல்லாம் கடத்தல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து அதிர்ந்தனர். முரத் அலி கடத்தி வந்த, 2,22,500 சவுதி ரியால், 1,500 கத்தார் ரியால், 1,200 குவைத் தினார், 300 ஓமன் ரியால், 1,800 யூரோ என 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெளிநாட்டு கரன்சியை கடத்தி வந்த முரத் அலியை தில்லி போலீஸ் வசம் ஒப்படைத்து, சுங்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories