உயிரை வாங்கிய தூக்கம்! வாகனத்தின் மேலிருந்து விழுந்து பலியான சோகம்!

Published:

accident while sleep - 2026

வாகனத்தின் மேல் பயணித்துக் கொண்டிருந்த போது சோர்ந்து போய் உறக்கிப்போன மனிதர் சாலையில் நழுவி விழுந்து மரணம் அடைந்தார்.

‘பீமடோலு’ எஸ்ஐ ஸ்ரீஹரி ராவ் கூறிய விவரம்: ‘நல்லஜர்ல’ மண்டலம், ‘தெலிகசெர்ல’ கிராமத்தைச் சேர்ந்த ‘மாசர்ல ஏசு’ ஒரு பாண்டு வாசிக்கும் குழுவோடு பயணித்துக் கொண்டிருந்தார்.

அண்மையில் வரிசையாக தொடர்ந்து திருமண சுப முகூர்த்தங்கள் இருந்ததால் பல்வேறு இடங்களுக்கு அந்தக் குழுவோடு சேர்ந்து சென்றுகொண்டிருந்தார் . வியாழக்கிழமை இரவு இவர்களுடைய குழு துவாரகா திருமலையில் நிகழ்ந்த ஒரு திருமணத்திற்கு பாண்டு வாசித்துவிட்டு வெள்ளிக்கிழமை விடிகாலையில் மினி வேனின் (ஐஷர்) மேல் அமர்ந்துகொண்டு பெததாடேபல்லியில் நிகழும் மற்றும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்தார்கள்.

அப்போது கூடூருபாடு எற்ற ஊரின் எல்லையில் பெட்ரோல் பங்கு சமீபத்தில் நித்திரையில் ஆழ்ந்த ஏசு (32) வாகனம் மீது இருந்து நழுவி சாலையில் விழுந்து அங்கேயே இறந்து போனார் .

குழுவில் மீதியிருந்த பேண்ட் வாத்தியக் குழுவினர் அந்த ஆபத்தை கவனிக்காமலேயே தாடேபல்லிகூடம் வரை சென்று விட்டார்கள். இறந்தவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் மூலம் ஹைவே பெட்ரோலிங் ஊழியர் பாண்டு குழுவினருக்கு செய்தி தெரிவித்தார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

இறந்தவரின் மனைவி மாசர்ல பானு அளித்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக எஸ்ஐ தெரிவித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img