அடச்சே..! வரதட்சணை கொடுமையால்… பரிதாபம்! கன்னட திரைப் பாடகி தற்கொலை!

kannada singer - 2026

வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பாடகி சுஷ்மிதா( 27), தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னட திரைப்படத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சரத் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட பாடகி சுஷ்மிதாவின் வாழ்க்கை அதற்குள் முடிந்து விட்டதே என்று திரைப்படத் துறையினரும் தொலைக்காட்சித் துறையும் தீவிர மன வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

திங்களன்று பெங்களூருவில் நகரபாவி என்ற இடத்தில் தன் தாய் மீனாட்சியின் வீட்டில் சுஷ்மிதா மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டு இறந்து போனார் .

kannada singer suicide - 2026

திருமணமான நாளிலிருந்து மாமியார் வீட்டில் கொடுமையை அனுபவித்து வருவதாக தற்கொலைக்கு முன் எழுதி வைத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் மன வேதனைக்கு உள்ளான சுஷ்மிதா தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தன் தாய்க்கும் சகோதரனுக்கும் வாட்ஸ்அப் மெசேஜ் கொடுத்து தன் மன வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

தன் இறப்புக்கு காரணம் தன் கணவனும் மாமியாரும் நாத்தனாரும் என்று அவர்கள் பெயரை குறிப்பிட்டு உள்ளார். மாமியார் வீட்டில் இறப்பதற்கு விருப்பமில்லாமல் ஞாயிறு அன்று அம்மா வீட்டுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். அவர் சகோதரன் இரவு ஒன்றரை மணிக்கு கொடுக்கப்பட்ட மெசேஜை காலை ஐந்தரை மணிக்குத் தான் பார்த்தார். பார்த்தவுடன் சுஷ்மிதாவின் அறைக்கு சென்று பார்த்தபோது அதற்குள்ளாகவே அவர் தூக்கில் தொங்கி மரணித்திருந்தார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சுஷ்மிதாவுக்கும் சரத்குமார் என்னும் தனியார் கம்பெனியில் வேலை செய்பவருக்கும் திருமணமாகியது. அவர் ஒரு கார் ஷோரூமில் மேனேஜராக பணிபுரிகிறார். திருமணம் ஆன நாள் முதலே அதிக வரதட்சணை கேட்டு கணவரும் அவருடைய சகோதரியும் மாமியாரும் கொடுமை செய்து வருவதாகவும் தன் மரணத்திற்கு தன் கணவரும் மாமியாரும் நாத்தனாரும் காரணம் என்றும் கடிதம் எழுதியுள்ளார்.

kannada singer suicide1 - 2026

மாமியார் வைதேஹி யும் நாத்தனார் கீதாவும் காரணமின்றி தன்னை அடிப்பதாகவும் பலர் முன்னால் அவமானப்படுத்துவதாகும் அதைத் தன் கணவருக்கு எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் அவர் கேட்காமல் தன் மனிதர்களையே சப்போர்ட் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தன் இறப்புக்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது என்று தன் தாயிடம் குறிப்பிட்டுள்ளார். இவருடைய தற்கொலையை அறிந்த கணவன் வீட்டார் ஓடிப் போனார்கள். போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories