அடச்சே..! வரதட்சணை கொடுமையால்… பரிதாபம்! கன்னட திரைப் பாடகி தற்கொலை!

Published:

kannada singer - 2026

வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பாடகி சுஷ்மிதா( 27), தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னட திரைப்படத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சரத் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட பாடகி சுஷ்மிதாவின் வாழ்க்கை அதற்குள் முடிந்து விட்டதே என்று திரைப்படத் துறையினரும் தொலைக்காட்சித் துறையும் தீவிர மன வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

திங்களன்று பெங்களூருவில் நகரபாவி என்ற இடத்தில் தன் தாய் மீனாட்சியின் வீட்டில் சுஷ்மிதா மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டு இறந்து போனார் .

kannada singer suicide - 2026

திருமணமான நாளிலிருந்து மாமியார் வீட்டில் கொடுமையை அனுபவித்து வருவதாக தற்கொலைக்கு முன் எழுதி வைத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் மன வேதனைக்கு உள்ளான சுஷ்மிதா தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தன் தாய்க்கும் சகோதரனுக்கும் வாட்ஸ்அப் மெசேஜ் கொடுத்து தன் மன வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

தன் இறப்புக்கு காரணம் தன் கணவனும் மாமியாரும் நாத்தனாரும் என்று அவர்கள் பெயரை குறிப்பிட்டு உள்ளார். மாமியார் வீட்டில் இறப்பதற்கு விருப்பமில்லாமல் ஞாயிறு அன்று அம்மா வீட்டுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். அவர் சகோதரன் இரவு ஒன்றரை மணிக்கு கொடுக்கப்பட்ட மெசேஜை காலை ஐந்தரை மணிக்குத் தான் பார்த்தார். பார்த்தவுடன் சுஷ்மிதாவின் அறைக்கு சென்று பார்த்தபோது அதற்குள்ளாகவே அவர் தூக்கில் தொங்கி மரணித்திருந்தார்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சுஷ்மிதாவுக்கும் சரத்குமார் என்னும் தனியார் கம்பெனியில் வேலை செய்பவருக்கும் திருமணமாகியது. அவர் ஒரு கார் ஷோரூமில் மேனேஜராக பணிபுரிகிறார். திருமணம் ஆன நாள் முதலே அதிக வரதட்சணை கேட்டு கணவரும் அவருடைய சகோதரியும் மாமியாரும் கொடுமை செய்து வருவதாகவும் தன் மரணத்திற்கு தன் கணவரும் மாமியாரும் நாத்தனாரும் காரணம் என்றும் கடிதம் எழுதியுள்ளார்.

kannada singer suicide1 - 2026

மாமியார் வைதேஹி யும் நாத்தனார் கீதாவும் காரணமின்றி தன்னை அடிப்பதாகவும் பலர் முன்னால் அவமானப்படுத்துவதாகும் அதைத் தன் கணவருக்கு எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் அவர் கேட்காமல் தன் மனிதர்களையே சப்போர்ட் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தன் இறப்புக்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது என்று தன் தாயிடம் குறிப்பிட்டுள்ளார். இவருடைய தற்கொலையை அறிந்த கணவன் வீட்டார் ஓடிப் போனார்கள். போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img