பிப்.19: இன்று சத்ரபதி சிவாஜி ஜெயந்தி!

Published:

shivaji ramadoss - 2026

மராட்டிய சக்ரவர்த்தி சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்தநாள் இன்று மஹாராஷ்டிராவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் சிவ ஜெயந்தி என்றும் சிவாஜி ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது.

1630 பிப்ரவரி 19 ல் முகலாயர் ஆட்சி காலத்தில் புணே மாவட்டம் ஷிவ்ரேனி மலைக்கோட்டையில் ஷாஹாஜி போன்ஸ்லே, ஜீஜாபாயி தம்பதிகளுக்கு சிவாஜி பிறந்தார்.

shivaji maharaj1 - 2026

1674 ஜூன்6ல் அரியணை ஏறினார். தாயிடம் மிக அன்பாக இருந்த சிவாஜி பக்தியோடு ராமாயண மகாபாரதங்களை படித்தறிந்தார். 1680 ஏப்ரல் 3 அன்று 52வது வயதில் இயற்கை எய்தினார் .

சிவாஜி பிறந்தநாளை சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபா பூலே முதன்முதலில் கொண்டாடத் தொடங்கினர். அப்போது முதல் சிவாஜி ஜெயந்தி கொண்டாட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

இருமுறை பாபாசாகேப் அம்பேத்கர் சிவாஜி ஜெயந்தி உற்சவங்களுக்கு தலைமை வகித்துள்ளார். சிவாஜி பிறந்த நாளன்று மகாராஷ்டிராவின் அனைத்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்களிலும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.

shivaji maharaj - 2026

இது மராட்டிய மக்களின் பெருமைமிக்க தினமாக கருதப்படுகிறது. மகாராஷ்டிரா மட்டுமின்றி சிவாஜி ஜெயந்தி கோவா, கர்நாடகாவிலும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் நாடகங்கள் நடத்தப்படுகின்றன.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

சிவாஜியின் சீரிய கருத்துக்களை சமுதாயத்தில் ஒவ்வொரும் கடைப்பிடிக்கும்படி செய்வதில் சிவாஜி ஜெயந்தி கொண்டாட்டங்கள் வெற்றி பெறுகின்றன.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img