பாஜக., தலைவர் அறிவிப்பு! தெலங்காணாவில் எப்படி?

Published:

bandi sanjay kumar - 2026

தமிழகத்தில் வெகு நாட்களாக பாஜக.,வினர் மட்டுமல்லாது, ஊடகங்களும் தங்கள் ஊகங்களால் இவர் தலைவர், அவர் தலைவர் என்று தாங்களே தலைவரை அறிவித்துக் கொண்டிருந்த நிலையில்… எவர் ஊகத்திலும் இல்லாத ஒருவரை தலைவர் என்று அறிவித்தது பாஜக., தலைமை!

அது போல், நேற்று, தெலங்காணா மாநில பிஜேபிக்கு புதிய தலைவரை அறிவித்தது தலைமையகம். தெலங்காணா பிஜேபி தலைவராக கரீம்நகர் எம்பி பண்டி சஞ்சய்குமார் என்பவரை நியமித்து உள்ளது.

bandi sanjaykumar - 2026

இளைஞர்களிடம் நல்ல பிடிப்பு உள்ள பண்டி சஞ்சய்க்கு பிஜேபி தலைமையகத்தோடு கூட ஆர்எஸ்எஸ் உடனும் நல்ல தொடர்பு உள்ளது. 2018 நவம்பரில் நடந்த தெலங்காணா அசம்பிளி தேர்தலில் தோல்வியுற்றார். இவர் 2019 ல் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்றார்.

‘முன்னூரு காப்பு’ இனத்தைச் சேர்ந்த பண்டி சஞ்சய் அவருடைய தொகுதியில் மட்டுமின்றி தெலங்காணா முழுவதும் சிறப்பாக அறியப்படுபவர்!

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img