பாகிஸ்தான் ஒரு ‘மரணக் கிணறு’: உஸ்மா

Published:

lady returned pakistan - 2026

புது தில்லி:

பாகிஸ்தான் ஒரு மரணக் கிணறு என்று வர்ணித்துள்ளார், பாகிஸ்தானில் இருந்து நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடத்தி இந்தியா மீண்ட பெண் உஸ்மா.

பாகிஸ்தானுக்குச் செல்வது சுலபம், ஆனால் அங்கிருந்து திரும்புவது மிகக் கடினம். பாகிஸ்தான் ஒரு மரணக் கிணறு. பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணமானாலும், திருமணத்துக்குப் பின்னர் அங்குச் செல்பவர்கள் அழுதுகொண்டுதான் உள்ளனர் என்று கூறியுள்ளார் உஸ்மா.

இதனிடையே உஸ்மா இங்கு நம்மிடையே இருப்பதற்குக் காரணம், பாகிஸ்தானின் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களுடனான ஒத்துழைப்புதான். இந்தப் பெண்ணுக்காக வாதாடிய வழக்குரைஞர் ஷானவாஸ் நூனைப் பாராட்டுகிறேன். அவர் தனது மகளைப் போல் நினைத்து இந்தப் பெண்ணுக்காக வாதாடினார் என்று கூறியுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

முன்னதாக இன்று காலை வாகா எல்லை வழியாக இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தபோது, இந்திய மண்ணை விழுந்து தொட்டு கும்பிட்டு உள்ளே வந்தார் உஸ்மா. இவர் அண்மையில் பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் ஒருவர் தன்னை திருமணம் செய்ய முயன்றதாகக் கூறி இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். தூதரகத்தின் சார்பில், சட்டப் போராட்டம் நடத்தி அவர் இன்று இந்தியா திரும்பினார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

 

முன்னதாக வந்த செய்தி …

துப்பாக்கி முனையில் பாகிஸ்தானில் திருமணம்: ரண வேதனையில் இந்தியா திரும்பிய பெண் சுஷ்மாவுக்கு நன்றி!

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img