அயோத்தி வழக்கு: மே 30ல் அத்வானி உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சம்மன்!

Published:

ayodhya disputed babri building demolished - 2026

புது தில்லி:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி கட்டட இடிப்பு வழக்கில் மே 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி, மே 20-ம் தேதி முதல் சிறப்பு நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. இதில், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி, ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங் ஆகியோர் மீதான விசாரணையும் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு கல்யாண் சிங் தவிர, மற்றவர்களுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வழக்கு விசாரணையை இரண்டு ஆண்டுகளுக்கு முடிக்க வேண்டும் என்பதால் சாட்சிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் யாரும் அதிக வாய்தா பெற்று கால தாமதம் செய்ய வேண்டாம் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img