கொரோனா பாதித்தவர்களுக்கு ஆரோக்கிய உணவு வழங்குகிறது ஆந்திர அரசு!

Published:

dry fruits supplied for corona - 2026

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உலர் பழங்கள், முட்டை மற்றும் பழங்களை ஆந்திர அரசு வழங்குகிறது.

ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அங்கே தங்கியிருப்பவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரும்பாலான நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட உகந்த இயற்கை உணவை ஆந்திர அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஆரஞ்சு, வாழைப்பழங்கள், முந்திரி பருப்புகள், பாதாம், பேரீச்சம்பழங்கள். பிஸ்தா ஆகியவற்றுடன், வேகவைத்த முட்டைகளுடன் பழங்களும் வழங்கப்படுகின்றன. இந்த தனிமைப் படுத்தல் மையங்களில் சோதனை நேரங்களில் தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு ஆரோக்கியமாக இருக்க இந்த உணவு உதவுகிறது என்று உறுதியுடன் கூறுகின்றனர்.

மாநிலங்கள் முழுவதும் உள்ள அனைத்து நிவாரண மையங்களிலும் முதல்வரால் பரிந்துரைக்கப்பட்ட ‘கோருமுதா’ மெனுவைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த லாக் டவுன் நேரத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீடற்ற மக்கள் மற்றும் அடிநிலை மக்களுக்கு முட்டை, பருப்பு, சுண்டல் போன்றவற்றுடன், அரிசி மற்றும் பல்வேறு காய்கறிகள் போன்றவையும் வழங்கவுள்ளன.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img