நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்ல செய்தி… ஆந்திர மாம்பழங்கள் சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி!

Published:

mangos - 2026

சுவிட்சர்லாந்துக்கு ஆந்திராவிலிருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி… திருப்பதியில் இருந்து 1.2 டன் மாம்பழங்களை ஏற்றுமதி செய்த ஏபி ஆக்ரோஸ் பேக் நிறுவனம்.

பொருளாதார அமைப்புக்கு இது நல்ல செய்தி என்கிறார்… அமைச்சர் மேகபாடி கௌதம்ரெட்டி.

லாக்டௌன் நேரத்தில்கூட விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதில் மாநில அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக திருப்பதி ஏபி அக்ரோஸ் பேக் ஹவுஸ் நிறுவனத்திலிருந்து சுவிட்சர்லாந்துக்கு 1.2 டன் பங்கனப்பள்ளி மாம்பழங்கள் ஏற்றுமதி செய்துள்ளார்கள்.

மாநில தோட்டத் துறையின் உதவியோடு விவசாயிகள், வியாபாரிகள் ஒன்றிணைந்து ஏபி அக்ரோஸ் பேக் நிறுவனத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள். மாநிலத்தில் விளையும் பல்வேறு பழங்கள், காய்கறிகளை இந்த நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் டன்களுக்கு மேலாக மாம்பழங்கள் விளைச்சல் இருப்பதால் அதில் ஆயிரம் டன்கள் வரை அமெரிக்கா, ஐரோப்பா, தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். முக்கியமாக பங்கனப்பள்ளி, ஸ்வர்ண ரேகா, அல்போன்சா போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறார்கள்.

லாக்டௌன் நேரத்தில் பொருளாதார அமைப்பு நிறைவாக உள்ளது என்று கூறுவதற்கு இது ஒரு சுபச்செய்தி என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் மேகபாடி கௌதம்ரெட்டி ட்விட் செய்துள்ளார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img