ஜூன் 21 சூரிய கிரகணம் காரணமாக இந்த மாதம் 21 ஆம் தேதி விடியற்காலையிலிருந்து மத்தியானம் ஒரு மணிவரை ஸ்ரீவாரு ஆலயம் மூடப்படும் என்றும் மீண்டும் மதியம் இரண்டரை மணிக்கு ஆலய சுத்தி செய்து அதன் பிறகு பக்தர்களுக்கு தரிசனம் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் தேவஸ்தானம் ஈவோ அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
ஜூன் 21 அன்று காலை 10.18மணி முதல் மதியம் 1.38 மணி வரை சூரியகிரகணம் இருக்கும் என்று ஈவோ தெரிவித்தார்.
ஞாயிறன்று திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஏற்பாடு செய்த டயல் யுவர் ஈவோ நிகழ்ச்சியில் இந்த விஷயம் தெரிவித்தார்.
கரோனா பரவுதல் பின்னணியில் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பக்தர்களை உத்தேசித்து உரையாற்றினார். கடந்த காலத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்ட டயல் யுவர் ஈவோ நிகழ்ச்சியில் பக்தர்களிடம் இருந்து கிடைத்த யோசனைகளின் படி இந்த முறை முயற்சி செய்து ஞாயிறு அன்று காலை 9 லிருந்து 10 வரை நடத்தினார்கள். பக்தர்களின் பங்காற்றல் நன்றாக இருப்பதாகவும் இதேபோல் தொடரும் என்றும் கூறினார்.
கரோனா பரவுதலை கட்டுப்படுத்துவதற்கு சென்ற மார்ச் 20ல் இருந்து திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தோடுகூட திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு தொடர்புடைய அனைத்து ஆலயங்களிலும் பக்தர்களுக்கு தரிசனங்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். சில சமூக வலைதளங்களில் ஆலயங்களை மூடி விட்டார்கள் என்றும் கைங்கரியங்கள் நடக்கவில்லை என்றும் அன்ன பிரசாதங்கள் சரியாக நிவேதிக்க படவில்லை என்றும் தவறான பிரச்சாரங்கள் செய்தார்கள் என்று நினைவுபடுத்தினார்.
ஆனால் பக்தர்களின் மனநிலைகள் பாதிக்கப்படாமல் தெளிவான அறிவிப்புகள் செய்தோம் என்றார். ஆலயங்களில் நடக்கும் அனைத்து சேவைகளும் கைங்கரியங்களும் நிவேதனங்களும் உற்சவங்களும் சம்பிரதாயப்படி ஏகாந்தமாக நடந்தன என்று கூறினார்.