வாகனத்தின் பாரம் தாங்காமல்… சரிந்து விழுந்த பாலம்!

Published:

bridge collapsed
bridge collapsed

டேராடூனில் ஒரு பாலத்தின் மீது அதிக பாரம் உள்ள வாகனம் சென்றபோது அந்தப் பாலம் உடைந்து விழுந்தது. டேராடூன் அருகிலுள்ள எல்லைப்பகுதியில் திங்களன்று இந்த சம்பவம் நடந்தது.

எல்ஏசி க்கு 65 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிதொராகட் மாவட்டத்தில் முன்சியாரி என்ற இடத்தில் ரிவுலேட் என்ற நதி மீது பைலீ பிரிட்ஜ் உள்ளது.

இந்த பாலம் பலவீனமாக இருப்பதாக உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு எச்சரித்த போதிலும் மிக அதிக பாரமான போக்லைனை சுமந்து கொண்டு ஒரு லாரி அந்த பாலத்தின் மீது சென்றது . அதனால் அந்தப் பாலம் உடைந்து விழுந்ததால் லாரி சாய்ந்தது.

அந்த வாகனத்தில் இருந்த இருவர் காயமடைந்தனர். காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர். டிரைவர் கோதான் நிலைமை சீராக உள்ளது என்றும் பஞ்சாபைச் சேர்ந்த லக்குபீர்சிங் உடல்நிலை சீரியசாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் பாலத்தை மறுபுறத்தில் இருந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த வாகனத்தை அங்கிருந்து அகற்றிய பின்பு ஒரு வார காலத்திற்குள் பாலத்தை மராமத்து செய்தபின் மீண்டும் போக்குவரத்து நடக்குமென்று எல்லை போக்குவரத்து அமைப்பு அதிகாரிகள் குறிப்பிட்டார்கள்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img