லடாக் பகுதியில் இந்திய விமானப் படை போர் விமானங்கள் ரோந்து!

Published:

airforce
airforce

லடாக் எல்லைப்பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை அடுத்து ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீனா ராணுவத்தினரிடையே நடைபெற்ற கைகலப்பு தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீன ராணுவத்தினர் ஊடுருவலைத் தடுத்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

airforce
airforce

இதனிடையே, ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் உள்ள சேவா உளா என்ற இடத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், அங்கு வந்த பாதுகாப்பு படையினரை தாக்கினர். இருதரப்புக்கும் இடையே சண்டை நடந்தது.

army chief
army chief

இதில் அடையாளம் தெரியாத 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையனர் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளார்களா என பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Related articles

Recent articles

spot_img