December 6, 2025, 9:39 PM
25.6 C
Chennai

சி.எம்., போன மாசம் தொடங்கி வெச்ச கால்வாய்… உடைப்பு எடுத்து ஊருக்குள் வெள்ளம்!

kondapochama canal
kondapochama canal

ஊருக்குள் புகுந்த வெள்ளம்: கொண்ட போச்சம்மா சாகர் கால்வாய்க்கு உடைப்பு ஏற்பட்டது. கிராமத்தை மூழ்கடிக்கும் வெள்ளம்.

மே மாத இறுதியில் தெலங்காணா முதல்வர் கேசிஆர் கரங்கள் மீதாக பெருமைக்குரியதாக தொடங்கப்பட்ட கொண்ட போச்சம்மா சாகர் கால்வாய்க்கு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடாபுரம் கிராமத்தில் வெள்ள நீர் புகுந்தது.

முதல்வர் கேசிஆர் ஒரு மாதம் முன்பு மிகவும் பெருமைக்குரியதாக தொடங்கிய கொண்டபோச்சம்மா சாகர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வெங்கடாபுரம் கிராமத்தில் ஏராளமாக வெள்ள நீர் புகுந்து ஊரை மூழ்கடித்து வருகிறது.

flood water i
flood water i

மழைநாளில் அதிகளவு வெள்ளநீர் சேர்ந்ததால் வெள்ளத்தின் ஓட்டம் அதிகமாக உள்ளது. கிராமத்தில் பல வீடுகளுக்குள் நீர் புகுந்து விட்டது. செவ்வாய் அன்று காலையிலிருந்தே கிராமத்திற்குள் நீர் புகுந்து வருவதால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கிராமத்தார் கவலை அடைந்தனர்.

ஜெகதேவ்பூர், ஆலேரு தொகுதிகளில் உள்ள எம் துருக்கப்பல்லி, பொம்மலராமாரம் மண்டலங்களில் உள்ள குளங்களை நிரப்புவற்தாக கொண்டபோச்சம்மா சாகர் நீரை திறந்துவிட்டார்கள்.

சிஎம் கேசிஆர் ஃபார்ம் ஹவுசுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் கால்வாய்க்கு உடைப்பு ஏற்பட்டது. உடனே எச்சரிக்கை அடைந்த மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் வலப்புற கால்வாய்க்கு நீர் விடுவதை நிறுத்தி வைத்தார்கள். சாகரில் உடைப்பு ஏற்பட்டது என்று அறிந்துகொண்ட உடனே பொருளாதாரத்துறை அமைச்சர் டி ஹரிஷ் ராவு எச்சரிக்கை ஆனார். நீர்வளத் துறை அதிகாரிகளோடு போனில் உரையாடினார். அது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கொண்ட போச்சம்மா சாகரில் இதற்கு முன்பு இரண்டு முறை உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த அளவுக்கு வெள்ளப் பிரவாகம் அதில் இல்லை. ஆனால் தற்போது மிக அதிக அளவில் வெள்ளநீர் வருவதால் வெங்கடாபுரம் கிராமம் மொத்தமும் நீர்மயமாக காட்சியளிக்கிறது.

Gushing Godavari waters invade Venkatapur village following a breach to Kondapochamma canal in erstwhile Medak district in Telangana

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories