ஊருக்குள் புகுந்த வெள்ளம்: கொண்ட போச்சம்மா சாகர் கால்வாய்க்கு உடைப்பு ஏற்பட்டது. கிராமத்தை மூழ்கடிக்கும் வெள்ளம்.
மே மாத இறுதியில் தெலங்காணா முதல்வர் கேசிஆர் கரங்கள் மீதாக பெருமைக்குரியதாக தொடங்கப்பட்ட கொண்ட போச்சம்மா சாகர் கால்வாய்க்கு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடாபுரம் கிராமத்தில் வெள்ள நீர் புகுந்தது.
முதல்வர் கேசிஆர் ஒரு மாதம் முன்பு மிகவும் பெருமைக்குரியதாக தொடங்கிய கொண்டபோச்சம்மா சாகர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வெங்கடாபுரம் கிராமத்தில் ஏராளமாக வெள்ள நீர் புகுந்து ஊரை மூழ்கடித்து வருகிறது.
மழைநாளில் அதிகளவு வெள்ளநீர் சேர்ந்ததால் வெள்ளத்தின் ஓட்டம் அதிகமாக உள்ளது. கிராமத்தில் பல வீடுகளுக்குள் நீர் புகுந்து விட்டது. செவ்வாய் அன்று காலையிலிருந்தே கிராமத்திற்குள் நீர் புகுந்து வருவதால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் கிராமத்தார் கவலை அடைந்தனர்.
ஜெகதேவ்பூர், ஆலேரு தொகுதிகளில் உள்ள எம் துருக்கப்பல்லி, பொம்மலராமாரம் மண்டலங்களில் உள்ள குளங்களை நிரப்புவற்தாக கொண்டபோச்சம்மா சாகர் நீரை திறந்துவிட்டார்கள்.
சிஎம் கேசிஆர் ஃபார்ம் ஹவுசுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் கால்வாய்க்கு உடைப்பு ஏற்பட்டது. உடனே எச்சரிக்கை அடைந்த மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் வலப்புற கால்வாய்க்கு நீர் விடுவதை நிறுத்தி வைத்தார்கள். சாகரில் உடைப்பு ஏற்பட்டது என்று அறிந்துகொண்ட உடனே பொருளாதாரத்துறை அமைச்சர் டி ஹரிஷ் ராவு எச்சரிக்கை ஆனார். நீர்வளத் துறை அதிகாரிகளோடு போனில் உரையாடினார். அது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கொண்ட போச்சம்மா சாகரில் இதற்கு முன்பு இரண்டு முறை உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த அளவுக்கு வெள்ளப் பிரவாகம் அதில் இல்லை. ஆனால் தற்போது மிக அதிக அளவில் வெள்ளநீர் வருவதால் வெங்கடாபுரம் கிராமம் மொத்தமும் நீர்மயமாக காட்சியளிக்கிறது.
Gushing Godavari waters invade Venkatapur village following a breach to Kondapochamma canal in erstwhile Medak district in Telangana