அப்துல் கலாம் நினைவு மண்டபம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

modi-ramesaram.jpg

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மதுரை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஷ்வரம் சென்றார். அங்கிருந்து குண்டுதுளைக்காத கார் மூலம் பேய்க்கரும்பு பகுதிக்குச் சென்றார் மோடி.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபம் தற்போது மிகப் பொலிவுடன் திகழ்கிறது. அப்துல்கலாமின் 2ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தை, பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். இதற்காக அவர் தில்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி காலை 10 மணியளவில் மதுரை வந்தார். மதுரை வந்த பிரதமர் மோடியை, ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் ராமேஸ்வரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டுச் சென்றார். ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி, பின்னர் கார் மூலம் பேய்க்கரும்பு பகுதிக்குச் சென்றார்.

பின்னர், அப்துல் கலாம் நினைவு மண்டபத்தின் முன்னர் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் அவர் மண்டபத்தின் ரிப்பன் கத்திரித்து திறந்துவைத்தார். உள்ளே கலாம் வீணை வாசிப்பது போன்ற சிலையைத் திறந்துவைத்து, மண்டபத்தில் கலாம் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ராக்கெட் மாதிரிகள், புகைப்படங்கள், வெவ்வேறு மெழுகுச் சிலைகள், உலகத் தலைவர்களுடன் கலாம் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், கட் அவுட்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

modi-in-rameswaram1.jpg

modi-open-rameswaram-kalam.jpg

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories