புது தில்லி: கருப்புப் பணத்தைக் கட்டுப் படுத்தும் வகையில் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 300 சதவீத அபராதமும் விதிக்கும் வகையில் விரிவான சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் என்று சென்ற மாதம் பொது பட்ஜெட் தாக்கல் செய்த பொது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார். அதன்படி, கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்தப் புதிய மசோதா, வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்குவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கவும், அதை வெளிக் கொண்டு வரவும் உதவும். மேலும் இந்த மசோதா வரித்துறைக்கு அதிக அதிகாரங்களை அளிக்கிறது. இந்த மசோதா, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
கருப்பு பணத்தைக் கட்டுப்படுத்தும் புதிய மசோதா: அமைச்சரவை ஒப்புதல்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

