தான் அடித்து உதைக்கப்படும் வீடியோ: வாட்ஸ்அப்பில் வந்ததால் இளம்பெண் அதிர்ச்சி

Published:

up-girl-beatஹத்ராஸ் (உ.பி.,): உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தான் நண்பருடன் சென்றபோது ஒரு கும்பலால் 10 நிமிடங்களுக்கும் மேல் அடித்து உதைக்கப்படும் வீடியோ வாட்ஸ் அப்பில் உலவியதால் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 5 மணி நேர பயணத் தொலைவில் உள்ள ஹத்ராஸில் கடந்த மார்ச் 8ம் தேதி இளம்பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் நடு சாலையில் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணும் அவரது ஆண் நண்பரும் மோட்டார் சைக்கிளில் சந்தைப் பகுதி வழியாகச் சென்றுள்ளனர். அப்போது இரு பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த இரு சக்கர வாகனத்தை மறித்து, இருவரையும் கீழே தள்ளி, அந்தப் பெண்ணை அடித்து உதைத்துள்ளது. அந்தப் பெண்ணை மோசமான வார்த்தைகளால் திட்டி, உதைத்துள்ளனர். அந்தப் பெண் தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியும், அவர்கள் அந்தப் பெண்ணின் பெயரைச் சொல்லி திட்டி அடித்து உதைத்துள்ளனர். இந்த வீடியோ பதிவு செல்பொனில் பதிவாகியுள்ளது. இதனை, அந்தப் பெண்ணை அடித்த நால்வரில் ஒருவரே தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் அதனை நண்பர்களிடம் உலவ விட்டுள்ளார். அது வாட்ஸ் அப்பில் வெளியாகி அந்தப் பகுதியில் பலரிடம் பரவியுள்ளது. தான் ஒரு கும்பலால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவத்தை தன் பெற்றோரிடம் கூறாமல் தவிர்த்துள்ளார் அந்தப் பெண். ஆனால், அவரது உறவினர் ஒருவர் இந்த வாட்ஸ் அப் வீடியோவைக் கண்டு அவரது பெற்றோரிடம் கூறியதில் உண்மை வெளிவந்துள்ளது. இதை அடுத்து, இந்த விவகாரம் காவல் நிலையத்துக்குச் சென்றது. போலீஸாரின் விசாரணையில், அந்த கும்பல் அதே ஊரைச் சேர்ந்தது என்றும், அவர்களில் ஒருவன் அந்தப் பெண்ணைக் காதலித்ததும், ஆனால் அந்தப் பெண் வேறு ஒரு ஆண் நண்பருடன் சுற்றியதால் ஆத்திரமடைந்து அடித்ததும் தெரியவந்தது. இதை அடுத்து அந்த 4 பேரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img