தான் அடித்து உதைக்கப்படும் வீடியோ: வாட்ஸ்அப்பில் வந்ததால் இளம்பெண் அதிர்ச்சி

up-girl-beatஹத்ராஸ் (உ.பி.,): உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தான் நண்பருடன் சென்றபோது ஒரு கும்பலால் 10 நிமிடங்களுக்கும் மேல் அடித்து உதைக்கப்படும் வீடியோ வாட்ஸ் அப்பில் உலவியதால் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 5 மணி நேர பயணத் தொலைவில் உள்ள ஹத்ராஸில் கடந்த மார்ச் 8ம் தேதி இளம்பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் நடு சாலையில் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணும் அவரது ஆண் நண்பரும் மோட்டார் சைக்கிளில் சந்தைப் பகுதி வழியாகச் சென்றுள்ளனர். அப்போது இரு பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த இரு சக்கர வாகனத்தை மறித்து, இருவரையும் கீழே தள்ளி, அந்தப் பெண்ணை அடித்து உதைத்துள்ளது. அந்தப் பெண்ணை மோசமான வார்த்தைகளால் திட்டி, உதைத்துள்ளனர். அந்தப் பெண் தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியும், அவர்கள் அந்தப் பெண்ணின் பெயரைச் சொல்லி திட்டி அடித்து உதைத்துள்ளனர். இந்த வீடியோ பதிவு செல்பொனில் பதிவாகியுள்ளது. இதனை, அந்தப் பெண்ணை அடித்த நால்வரில் ஒருவரே தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் அதனை நண்பர்களிடம் உலவ விட்டுள்ளார். அது வாட்ஸ் அப்பில் வெளியாகி அந்தப் பகுதியில் பலரிடம் பரவியுள்ளது. தான் ஒரு கும்பலால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவத்தை தன் பெற்றோரிடம் கூறாமல் தவிர்த்துள்ளார் அந்தப் பெண். ஆனால், அவரது உறவினர் ஒருவர் இந்த வாட்ஸ் அப் வீடியோவைக் கண்டு அவரது பெற்றோரிடம் கூறியதில் உண்மை வெளிவந்துள்ளது. இதை அடுத்து, இந்த விவகாரம் காவல் நிலையத்துக்குச் சென்றது. போலீஸாரின் விசாரணையில், அந்த கும்பல் அதே ஊரைச் சேர்ந்தது என்றும், அவர்களில் ஒருவன் அந்தப் பெண்ணைக் காதலித்ததும், ஆனால் அந்தப் பெண் வேறு ஒரு ஆண் நண்பருடன் சுற்றியதால் ஆத்திரமடைந்து அடித்ததும் தெரியவந்தது. இதை அடுத்து அந்த 4 பேரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories