புது தில்லி: “முக்கிய மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது அவைக்கு வராதது ஏன்? காரணம் சொல்லுங்கள்” என்று மக்களவையில் பாஜக., எம்.பி.,க்களிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். செவ்வாய்க் கிழமை நேற்று மக்களவையில் நிலம் கையகப்படுத்தும் மசோதா மீதான ஓட்டெடுப்பு நடைபெற்றது. அப்போது பா.ஜ.க, எம்.பி.,க்கள் பலர் அவைக்கு வரவில்லை. இதையடுத்து, அவைக்கு வராதவர்கள் பெயர்களை எழுதித் தருமாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் பிரதமர் மோடி கேட்டார். இதை அடுத்து அந்தப் பட்டியலை பிரதமரிடம் கொடுத்தார் அவர். இந்நிலையில், அவைக்கு வராத காரணத்தை பிரதமரிடம் தெரிவிக்க வேண்டும் என அவர்களிடம் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார். அவைக்கு வராத எம்.பி.,க்களின் பெயர்ப் பட்டியலில் நரேந்திர சிங் டோமர், சத்ருகன் சின்கா, வருண் காந்தி, பூணம் மகாஜன், பிரீத்தம் முண்டே, ரிதி பதக், சந்திர பிரகாஷ் ஜோஷி என 23 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் கோபமடைந்த மோடி, மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து முக்கியப் பொறுப்புக்காக தேர்ந்தெடுத்துள்ளனர். அதை வீணாக்குகிறீர்கள் என்று கோபத்துடன் கூறினாராம். அவைக்கு வராத காரணமாக, தங்கள் வீட்டில் துக்கம் அல்லது திருமணம், உடல்நலக் கோளாறு இப்படியாக பெரும்பாலான எம்.பி.க்களும் கூறியுள்ளனர். முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால் அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அனைத்து உறுப்பினர்களும், அனைத்து நாட்களும் அவைக்கு வர வேண்டும் என வெங்கய்ய நாயுடு உறுப்பினர்களுக்கு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
Hot this week
இந்தியா
தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!
மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம். இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
தலையங்கம்
சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!
புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உலகம்
டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!
9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics
இந்தியா
தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!
மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம். இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
தலையங்கம்
சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!
புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உலகம்
டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!
9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
கட்டுரைகள்
தமிழ்த் தாயைக் காத்த தனயன்
ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

