பக்ரீத்.. பசுக்களைக் கொல்ல வேண்டாம்: தெலங்காணா அமைச்சர் மொஹம்மத் அலி!

Published:

telangana-minister-mahmood-ali
telangana-minister-mahmood-ali

பசுக்களை கொல்ல வேண்டாம்… முகமூது அலி.

பக்ரீத் தொடர்பாக பசுமாடுகளை கொல்ல வேண்டாம் என்று தெலங்காணா உள்துறை அமைச்சர் மொஹம்மது மொஹம்மூது அலி முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பக்ரீத் தொடர்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து டிஜிபி மகேந்திர ரெட்டியோடு அமைச்சர் கூட்டம் நிர்வகித்தார். தெலங்காணாவில் அனைத்து மதங்களையும் கௌரவித்து வருகிறோம் என்றும் இதே முறையில் பக்ரீத் கூட நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆகஸ்ட்1ம் தேதி பக்ரீத்தின் போது ஆடு மற்றும் பிறவற்றை பலியிடலாம் என்றும் பசுக்களை ஹிந்துக்கள் பூஜை செய்வதால் பசுவதை செய்யக்கூடாது என்றும் தெலங்காணா உள்துறை அமைச்சர் மொஹம்மது மொஹம்மூது அலி அழைப்பு விடுத்தார். டிஆர்எஸ் அரசாங்கம் தெலங்காணாவில் செக்யூலரிசம் கடைபிடிக்கிறது என்றார்.

நிஜாம் மற்றும் குதுப்ஷாஹி அரசர்களும் செக்யூலரிசம் கடைபிடித்தார்கள் என்று சுட்டிக்காட்டினார். சார்மினாரில் உள்ள நான்கு தூண்களான மினார்களை ஹிந்து, முஸ்லிம்,சீக்கியர், கிறிஸ்டியன் என்று நாம் எண்ணுகிறோம் என்றார். அனைத்து மதங்களையும் குலங்களையும் சமமாக கௌரவிக்க வேண்டும் என்று முகமூது அலி அழைப்பு விடுத்தார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கழிவுகளை சாலைகளிலும் வீதிகளிலும் தூக்கி எறிய வேண்டாம். சுகாதாரத்தின் மீது பிரத்யேக கவனம் வகிக்க வேண்டும் என்றார். கொரோனாவை கவனத்தில் கொண்டு சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img