போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்று… மனைவியை வெள்ளத்தில் பறிகொடுத்த கணவர்!

woman body found in tungabhadra river - 2026

போலீஸிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் தவறு நேர்ந்தது. மனைவியை நிரந்தரமாக இழந்த சோகம்.

ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் முன்பு காரோடு கூட அடித்துச் செல்லப்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் சிந்துஜா ரெட்டி இறந்த உடலாக மிதந்தார். அருகில் உள்ள துங்கபத்ரா நதியில் அவருடைய உடல் வெளிவந்தது.

போலீஸ் வாகன சோதனையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் ஒருவர் தன் மனைவியை இழந்த சோகச் சம்பவம் இது.

ஜோகுலாப்பா கத்வால் மாவட்டம் உண்டவல்லி மண்டலம் கலுகொட்ல வாகு என்ற கால்வாயில் இரண்டு நாட்கள் முன்பு மூழ்கி இறந்த சிந்துஜா ரெட்டி கர்னூல் நகரம் அருகில் துங்கபத்ரா நதியில் சவமாக மிதந்தார்.

கத்வால் மாவட்டம் புல்லூரு, கலுகொட்ல மத்தியில் உள்ள கால்வாயில் ஜூலை 25ம் தேதி காரோடு கூட சிந்துஜா அடித்துச் செல்லப்பட்டார். ஹைதராபாதில் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வரும் வழியில் இந்த சோக சம்பவம் நேர்ந்தது. இரண்டு நாட்களாக அதிகாரிகள் அவருடைய உடலை அடையாளம் காண தேடி வந்தார்கள்.

woman body found in tungabhadra river1 - 2026

கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த சிவசங்கர் ரெட்டி, சிந்துஜா ரெட்டி க்கு ஓராண்டு முன்பு திருமணம் நடந்தது. அந்த தம்பதிகள் இருவரும் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். சிவசங்கரின் சகோதரி ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். சகோதரியின் புது வீட்டு கிருகப்பிரவேசத்தில் பங்கு பெறுவதற்கு சிவசங்கர் ரெட்டி தன் மனைவியோடு கூட நண்பன் ஜிலானி பாஷாவும் வெள்ளிக்கிழமை இரவு பெங்களூரில் இருந்து காரில் ஹைதராபாத்துக்கு கிளம்பினார்கள்.

சனிக்கிழமை விடியற்காலை 5 மணிக்கு இவர்கள் கர்னூல் மாவட்டத்தை அடைந்தார்கள்.

துங்கபத்திரா நதி அருகில் இருக்கும் புல்லூரு செக்போஸ்ட் அருகே போலீசார் சோதனை இருக்கும் என்று நினைத்த சிவசங்கர், அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வாகனத்தை கலுகொட்ல பக்கம் திருப்பினார். அந்த சமயத்தில் கலுகொட்ல கால்வாயில் சகதியான சதுப்பு நிலத்தின் மீது கட்டப்பட்ட பாலத்தின் மேல் (காஸ்வே மீது) மழை நீர் மிக அதிக அளவில் ஓடியது. வெள்ளத்தின் தீவிரத்தை கவனிக்காமல் காரை அப்படியே முன்னோக்கி நடத்தினார்கள்.

காஜ்வே யைத் தாண்டும்போது கார் தண்ணீரில் நின்று விட்டது. அதிதீவிரமான வெள்ளத்தின் பிரவாகத்தில் நின்றுபோன காரிலிருந்து சிவசங்கர் ரெட்டி, ஜிலானி பாஷா கீழே இறங்கினார்கள். சிந்துஜாவை வெளியே இழுக்க முயற்சிக்கையில் காரோடு கூட அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். செய்தி அறிந்த போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

சனிக்கிழமை காரை வெளியில் எடுத்தார்கள். திங்கள்கிழமை மதியம் சிந்துஜா உடலை வெளியில் எடுத்தார்கள். கலுகொட்ல வில் இருந்து சுமார் 600 மீட்டர் தூரத்தில் துங்கபத்ரா உள்ளது. கால்வாயில் விழுந்த சிந்துஜா வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு இறுதியில் நதியில் உடலாக மிதந்தார்.

தற்போது துங்கபத்ரா நதிக்கு மிக அதிக அளவில் மழைநீர் வரும் பின்னணியில் சிந்துஜாவுடைய அடையாளம் கிடைப்பதே கஷ்டம் என்று நினைத்தார்கள். கண் எதிரிலேயே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தன் மனைவி இறந்த உடலாக மிதந்ததால் சிவசங்கர் ரெட்டி துயரத்தில் ஆழ்ந்தார். கண்ணீர்விட்டு கதறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories