February 22, 2026, 8:04 AM
26.1 C
Chennai

பற்றி எரியும் பஞ்சாப்: அமைதியை ஏற்படுத்த ராணுவம் புகுந்தது

ram rahim thera sacha - 2026

பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் கைது செய்யப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது.

ஆசிரமத்தில் தங்கியிருந்த இரு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேரா சச்சா செளதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்கான தண்டனை விவரமானது திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு வழங்கப்படும் போது வன்முறை வெடிக்கலாம் என முன் கூட்டியே பஞ்சாப், அரியானா, சண்டிகார் மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராணுவம், துணை ராணுவம், மாநில போலீஸ் படைகள் என 50 ஆயிரத்திற்கும் அதிகமான படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இருப்பினும் வன்முறை பெருமளவில் வெடித்துள்ளது.

வன்முறைகாரர்களை விரட்ட பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்து கூட்டத்தை கலைக்க முயன்றனர். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தை ஒட்டிய பகுதியிலும் வன்முறை வெடித்துள்ளது. பஞ்ச்குலாவில் ராம் ரஹீம் ஆதரவாளர்களை விரட்ட பாதுகாப்பு படைகள் தெருவில் இறங்கினர். பல பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல இடங்களில் செய்தியாளர்களின் ஊடக வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஊடகத்தினருக்கு சரமாரியாக அடி விழுந்தது. மாண்சாவில் இரு கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் பொதுமக்கள் அமைதியாக இருக்க கோரிக்கை விடுத்துள்ளார். சிர்சாவிலும் பதட்டம் அதிகரித்துள்ளது.

குர்மீத் ராம் ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் தீ பிடித்து எரியும் புகையுடன் கூடிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. குர்மீத் ராம் ரோக்தாக் சிறைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்படுகிறார்.

இதனிடையே இந்தக் கலவரங்களில் சுமார் 11 பேர் கொல்லப் பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கலவரத்தை அடக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டத்தை உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டினார். அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்ட அவர், ராணுவத்தை அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதை அடுத்து ராணுவம் அனுப்பப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories