பற்றி எரியும் பஞ்சாப்: அமைதியை ஏற்படுத்த ராணுவம் புகுந்தது

ram rahim thera sacha - 2026

பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் கைது செய்யப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது.

ஆசிரமத்தில் தங்கியிருந்த இரு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேரா சச்சா செளதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்கான தண்டனை விவரமானது திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு வழங்கப்படும் போது வன்முறை வெடிக்கலாம் என முன் கூட்டியே பஞ்சாப், அரியானா, சண்டிகார் மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராணுவம், துணை ராணுவம், மாநில போலீஸ் படைகள் என 50 ஆயிரத்திற்கும் அதிகமான படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இருப்பினும் வன்முறை பெருமளவில் வெடித்துள்ளது.

வன்முறைகாரர்களை விரட்ட பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்து கூட்டத்தை கலைக்க முயன்றனர். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தை ஒட்டிய பகுதியிலும் வன்முறை வெடித்துள்ளது. பஞ்ச்குலாவில் ராம் ரஹீம் ஆதரவாளர்களை விரட்ட பாதுகாப்பு படைகள் தெருவில் இறங்கினர். பல பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல இடங்களில் செய்தியாளர்களின் ஊடக வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஊடகத்தினருக்கு சரமாரியாக அடி விழுந்தது. மாண்சாவில் இரு கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் பொதுமக்கள் அமைதியாக இருக்க கோரிக்கை விடுத்துள்ளார். சிர்சாவிலும் பதட்டம் அதிகரித்துள்ளது.

குர்மீத் ராம் ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் தீ பிடித்து எரியும் புகையுடன் கூடிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. குர்மீத் ராம் ரோக்தாக் சிறைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்படுகிறார்.

இதனிடையே இந்தக் கலவரங்களில் சுமார் 11 பேர் கொல்லப் பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கலவரத்தை அடக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டத்தை உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டினார். அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்ட அவர், ராணுவத்தை அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதை அடுத்து ராணுவம் அனுப்பப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories