தாசில்தார் வீட்டில் கைப்பற்றப்பட்ட 1.10 கோடி!

Screenshot_2020_0815_142716

ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தாசில்தார் ஒருவரின் வீட்டில் ரூ 1.10 கோடி பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தாசில்தார் பாலராஜ் நாகராஜ் மீது பல புகார்கள் வந்த நிலையில் ஊழல் தடுப்புப் பிரிவினர் அதிரடியாக நேற்று இரவு அவரது வீட்டில் சோதனை நடத்தினர்

இந்த சோதனையில் அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.10 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமின்றி 28 ஏக்கர் நிலம் கொண்ட பத்திரங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தாசில்தாரை அடுத்து அதே பகுதியை சேர்ந்த ஆர்.ஏ.ஓ வீட்டிலும் அதிரடியாக ஊழல் தடுப்புப் பிரிவினர் ரெய்டு செய்தனர்.

அவரது வீட்டிலும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

நேற்று இரவு முதல் தாசில்தார் வீட்டில் ரெய்டு நடந்து வருவதாகவும் அது இன்றும் தொடர்வதாகவும் இன்னும் பல முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கிசரா மண்டல வட்டாட்சியராக பணியாற்றி வரும் நாகராஜ் என்பவர் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணை உள்ளது. இந்நிலையில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் அஞ்சிரெட்டி என்பவர் வட்டாட்சியர் நாகராஜிடம் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது. இதனையறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நாகராஜின் வீட்டில் நடத்திய திடீர் சோதனையில், அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு சேர வேண்டிய 28 ஏக்கர் நிலத்தை இடைத்தரகர் அஞ்சிரெட்டி பெயரில் பட்டா அளித்திடுவதற்காக ஒருகோடியே பத்து லட்சம் ரூபாய் பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து வட்டாட்சியர் நாகராஜ் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

Topics

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

Entertainment News

Popular Categories