December 6, 2025, 9:13 AM
26.8 C
Chennai

தாசில்தார் வீட்டில் கைப்பற்றப்பட்ட 1.10 கோடி!

Screenshot_2020_0815_142716

ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தாசில்தார் ஒருவரின் வீட்டில் ரூ 1.10 கோடி பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தாசில்தார் பாலராஜ் நாகராஜ் மீது பல புகார்கள் வந்த நிலையில் ஊழல் தடுப்புப் பிரிவினர் அதிரடியாக நேற்று இரவு அவரது வீட்டில் சோதனை நடத்தினர்

இந்த சோதனையில் அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.10 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதுமட்டுமின்றி 28 ஏக்கர் நிலம் கொண்ட பத்திரங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தாசில்தாரை அடுத்து அதே பகுதியை சேர்ந்த ஆர்.ஏ.ஓ வீட்டிலும் அதிரடியாக ஊழல் தடுப்புப் பிரிவினர் ரெய்டு செய்தனர்.

அவரது வீட்டிலும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

நேற்று இரவு முதல் தாசில்தார் வீட்டில் ரெய்டு நடந்து வருவதாகவும் அது இன்றும் தொடர்வதாகவும் இன்னும் பல முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கிசரா மண்டல வட்டாட்சியராக பணியாற்றி வரும் நாகராஜ் என்பவர் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணை உள்ளது. இந்நிலையில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் அஞ்சிரெட்டி என்பவர் வட்டாட்சியர் நாகராஜிடம் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது. இதனையறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நாகராஜின் வீட்டில் நடத்திய திடீர் சோதனையில், அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு சேர வேண்டிய 28 ஏக்கர் நிலத்தை இடைத்தரகர் அஞ்சிரெட்டி பெயரில் பட்டா அளித்திடுவதற்காக ஒருகோடியே பத்து லட்சம் ரூபாய் பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து வட்டாட்சியர் நாகராஜ் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories