பெற்றோர்களை பிள்ளைகளே முதியோர் இல்லத்தில் சேர்க்கும் உலகத்தில் வாழ விரும்பவில்லை: பிரதமருக்கு சிறுமி எழுதிய தற்கொலை கடிதம்!

Screenshot_2020_0820_140237

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுமி, பிரதமர் மோடிக்கு 18 பக்க கடிதம் ஒன்றை எழுதி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் சாம்பால் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், தற்கொலைக்கு முன் அந்த சிறுமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். 18 பக்கத்திற்கு நோட்டு புத்தகம் ஒன்றில் எழுதிவைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில் தனது கோரிக்கைகள் மற்றும் விருப்பங்கள் பலவற்றை பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார்.

அதில், சுற்றுச்சூழல் மாசுபாடு, மருத்துவ துறையில் நடைபெறும் ஊழல், மரங்களை வெட்டுவது உள்ளிட்டவைகள் குறித்து அந்த சிறுமி கவலை தெரிவித்துள்ளார். அதில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது, பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும்,

ஹோலி பண்டிகையின் போது ராசயணம் நிறைந்த கலர் பொடிகளை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கையை வைத்துள்ளார்.

மேலும், ‘இங்கு முதியவர்கள் நிறைய பிரச்னைகளை சந்திக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளே பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்கள். இதனால் அவர்கள் கடைசி காலங்களில் வேதனைகளை அனுபவிக்கிறார்கள்.

பெற்றோர்களை பிள்ளைகளே முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் இந்த இடத்தில் நான் இனியும் வாழ விரும்பவில்லை, இக்கடிதத்தை பிரதமரின் கையில் சேர்த்து விடுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

பாப்ராலாவில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ள அச்சிறுமிக்கு ஏற்கனவே உளவியல் ரீதியான பிரச்னைகள் இருந்ததென்றும் அதற்காக சிகிச்சைப் பெற்று வந்ததென்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களது மகளின் ஆசைப்படி அந்த கடிதத்தை பிரதமர் மோடியிடம் சேர்க்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories