பிரணாப் முகர்ஜி மறைவு: தலைவர்கள் இரங்கல்!

pranab-mukarjee
pranab-mukarjee

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாரத முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமது 84 ஆவது வயதில் ஆக.31 திங்கள் கிழமை இன்று மாலை காலமானார். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்திருந்த போதும், கடந்த சில நாட்களாக கோமா நிலையில் இருந்தார். இந்நிலையில் இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது.

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தேசியத் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில்… அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் நிறைவு. இந்தியாவுக்கு மகத்தான சேவை செய்தார். தேசம் தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துள்ளது… என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்ட இரங்கல் செய்தியில்… அவர் மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு மூத்த அரசியல்வாதியை இழந்துள்ளது. அவரது கடுமையான உழைப்பு, நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு மூலம் நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரித்தார்… என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி தமது இரங்கல் செய்தியில்… நாட்டின் வளர்ச்சியில் அழியாத முத்திரை பதித்துள்ளார். அனுபவத்தில் அறிஞரான அவர், உயர்ந்த அரசியல்வாதி. அரசியல் எல்லையை தாண்டி, சமூகத்தின் அனைத்து பிரிவினராலும் போற்றப்பட்டார்… என்று குறிப்பிட்டு, தாம் முதல் முதலில் தில்லியில் 2014இல் தேர்தலில் வென்று பிரதமராக பதவிப் பொறுப்பேற்ற போது, அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் வழிகாட்டுதல்கள் எவ்வாறு பெரிதும் பயன்பட்டன என்பது குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

அரசியலில் நீண்ட நாட்கள் இருந்த பிரணாப் முகர்ஜி, பொருளாதாரம் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்தவர். சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர். வெளிப்படையானவர். குடியரசுத் தலைவர் மாளிகையை சாமான்ய மக்களும் எளிதில் அணுகும் வகையில் மாற்றினார். கற்பித்தல், கலாசாரம், அறிவியல் கற்றல் மற்றும் இலக்கிய மையமாக அதனை மாற்றினார். முக்கிய கொள்கை முடிவுகளில், அவரது புத்திசாலித்தனமான ஆலோசனைகளை என்னால் எப்போதும் மறக்க முடியாது. 2014ல் தில்லி எனக்கு புதிது. முதல்நாள் முதல், பிரணாப் முகர்ஜியின் வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் ஆசிர்வாதங்களை பெற்றேன். அவருடனான உரையாடல்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். … என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

தலைவர்களின் டிவிட்டர் பதிவுகள்…

ALSO READ:  மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories