கொரோனாவே இன்னும் முழுசா போகல… அதுக்குள்ள பரவலா பரவி பயமுறுத்துது பறவைக் காய்ச்சல்!

Published:

bird flu1 - 2026
  • இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோய்.
  • சிக்கன் மற்றும் முட்டைகளின் மீது தடை.
  • எச்சரிக்கையாக இருக்க வற்புறுத்தியுள்ள அரசு.

கொரோனா தொற்றில் இருந்து இன்னும் முழுமையாக விடுபடும் முன்பே மற்றும் ஒரு நோய் தன் சீற்றத்தை காட்டி வருகிறது. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வெளிப்பட்ட பறவை காய்ச்சல் நோய் கவலை அளிக்கும் விதமாக இந்தியாவெங்கும் பரவுகிறது.

இந்த வைரஸ் படிப்படியாக பிற மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. தற்போது இந்த வைரஸ் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் அடையாளம் கண்டுள்ளார்கள். அந்தந்த மாநிலங்களில் பெரிய அளவில் காக்கைகள் மயில்கள் வாத்து கோழிகள் இறந்து வருகின்றன. இதனால் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த வரிசையில் கேரளாவில் ஆயிரக்கணக்கில் பறவைகளைக் கொன்று வருகிறார்கள்.

இந்நிலையில் ஹிமாச்சல் அரசாங்கம் பறவைக் காய்ச்சல் நோய் குறித்து மக்களிடம் புரிதல் ஏற்படுத்தி வருகிறது. இதன்படி மாநிலத்தில் உள்ள பல இடங்களில் சிக்கன் முட்டைகள் மீன்கள் விற்பது குறித்து தடைவிதித்துள்ளது. மக்களிடம் கூட பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் இருக்கிறது என்றும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

bird flu2 - 2026

பறவைக் காய்ச்சல் காரணமாக ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்க்ரா மாவட்டத்திலுள்ள பாங்க் டாம் ஏரியில் வாத்துகள் பறவைக் காய்ச்சல் நோயால் தாக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானிலும் திங்களன்று 170 பறவைகள் இறந்துள்ளன.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

ராஜஸ்தானில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு பரவிய இந்த தொற்று நோய் இப்போது கேரளாவுக்கு பரவியுள்ளது. அங்கு ஆலப்புழா கோட்டயம் மாவட்டங்களில் சில பறவைகளுக்கு வைரஸ் அடையாளங்களை அதிகாரிகள் கவனித்து உள்ளார்கள். சென்ற வாரம் அதிகாரிகள் பறவைகளின் சாம்பிள்களை பரிசோதிப்பதற்காக போபாலுக்கு அனுப்பியதில் அவற்றில் வைரஸ் அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன.

சிந்தூர் என்ற இடத்தில் ஒரேயடியாக 1500 வாத்துகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். இந்த வைரஸ் பிற இடங்களுக்கும் பரவாமல் இருப்பதற்காக இந்த இடத்தைச் சுற்றிலும் கிலோமீட்டர் எல்லை வரை அனைத்து பறவைகளையும் கொன்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

இதுவரை 12,000 வாத்துகள் மரணித்து உள்ளது என்றும் முன்னெச்சரிக்கைகள் மற்றும் ஒரு 36 ஆயிரம் பறவைகளை கொல்ல வேண்டி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பறவை காய்ச்சல் பரவிய இடங்களில் மக்களுக்கு கூட மருத்துவ சோதனைகள் செய்து வருகிறார்கள். பறவைக்காய்ச்சல் பரவிய இடங்களில் ஜலதோஷம் இருமல் ஜுரத்தால் அவதிப்படுபவர்களுக்கு பிரத்தியேக மருத்துவ பரிசோதனைகளை செய்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

பறவைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் பறவைக் காய்ச்சல் மிகவும் ஆபத்தானது என்று கண்டுபிடித்து முடிவு செய்துள்ளார்கள். பறவைகள் அதிகமாக இறக்கும் இடங்களில் அதனால்தான் உடனுக்குடனே தடைகளை அமல் படுத்தி வருகிறார்கள். கோழிகளோடு கூட பிற பறவைகளையும் இந்த இடங்களில் முன்னெச்சரிக்கையாக கொன்று வருகிறார்கள்.

இந்தியாவில் முதன்முதலில் இந்தூரில் இந்த பறவை காய்ச்சல் வைரஸை கவனித்தார்கள். பறவைக் காய்ச்சல் வைரசால் 100 க்கும் மேலாக காகங்கள் இறந்தன. இறந்துபோன காகங்களில் பறவைக்காய்ச்சல் நொய்த்தொற்று இருந்தது தெரிய வந்தது. இதனால் நாடெங்கிலும் எச்சரிக்கை அறிவித்துள்ளார்கள். காக்கைகளால் இந்த நோய் பரவும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்துள்ளார்கள்.

பறவைக் காய்ச்சலின் பரபரப்பால் இன்டோர் நகரம் எல்லையில் 5 கிலோ மீட்டர் வரை கர்ஃப்யூ அறிவித்துள்ளார்கள். பறவை காய்ச்சல் ஏற்பட்ட பறவைகளை அடையாளம் காண்பதற்கு பிரத்தியேக நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள். பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கு பிரத்தியேக கண்ட்ரோல் ரூம் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img