அந்தரங்க வீடியோவை காட்டி பணம் பறிப்பு! ஹோட்டல் மேனஜர் கைது!

08 June01 Capual hotel
hotel

மகாராஷ்டிராவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய ஹோட்டல் மேனேஜரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாகூரைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் அங்கு செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் பணி புரிவதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். அந்த ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றி வந்த பங்கஜ் பாட்டில் என்பவர் அப்பெண்ணை நேர்காணல் செய்துள்ளார். அப்போது அப்பெண்ணை பற்றிய அனைத்து தகவல்களையும் பங்கஜ் கேட்டு தெரிந்து கொண்டார்.

அதன் பின் அந்த பெண்ணுடன் பங்கஜ் நெருங்கி பழகியுள்ளார்.சில நாட்களில் உங்களை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி ஆசை வார்த்தைகளால் பேசியுள்ளார்.

மேனேஜர் பங்கஜிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பது தெரிந்தும் அந்த பெண் அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளார். அதன் பிறகு இவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

அப்போது பங்கஜ் இவர்கள் உல்லாசமாக இருந்த வீடியோவை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் எடுத்துள்ளார். இப்படியே அவர்களது வாழ்க்கை உல்லாசமாக சென்று கொண்டிருந்தது. சில நாட்களுக்குப் பிறகு பங்கஜ் தானும் இதேபோன்று தனியாக ஹோட்டல் வைக்க நினைக்கிறேன் என்று கூறி அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டுள்ளார். அவரும் தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே கேட்கிறார் என்று 11 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

இப்படி அடிக்கடி அந்தப் பெண்ணிடம் பங்கஜ் பணம் கேட்டுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் பணம் இல்லாது போனதால் அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

அதன் பின் பங்கஜ் தாங்கள் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணும் கிட்டத்தட்ட 33 லட்சம் ரூபாய் பணமும் தன்னிடம் இருந்த அனைத்து நகைகளையும் கொடுத்துள்ளார்.

அதன்பின் அந்த பெண்ணிடம் இனிமேல் வாங்குவதற்கு எதுவுமில்லை என தெரிந்து கொண்ட பங்கஜ் அவரிடம் இருந்து விலகத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தன்னை ஏமாற்றிய மேனேஜர் பங்கஜ் பாட்டில் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் பெண்ணை ஆபாசமாக வீடியோவை எடுத்து மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக பங்கஜை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories