சொத்துக்கு ஆசைப்பட்டு மகனும், தனது காதலனை திருமணம் செய்துக் கொள்ள மகளும் இணைந்து சொந்த தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சுனில் குமார் என்பவர் தனது மனைவி ஆஷா தேவி, மகன் அனுஜ் மற்றும் மகள் அல்பனாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சுனில் குமாரின் மகன் அனுஜ் தந்தையின் சொத்தை அடையவும், மகள் அல்பனா தன் காதலனை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். ஆனால் சுனில்குமார் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர்களின் வழிகளில் தடையாக இருக்கும் அவரை கொலை செய்ய சகோதர-சகோதரி முடிவு செய்தனர். இதனால் கடந்த மார்ச் 26 ம் தேதி இரவு சகோதரனும் சகோதரியும் அவர்களது நண்பர்களுடன் இணைந்து கொடூரமாக அடித்து கொலை செய்தனர்.
இதனை தொடர்ந்து தங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என தங்களை பாதுகாத்துக் கொள்ள போலீஸில் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்த சுனில் குமார் 20 லட்ச ரூபாய்க்கு சொத்தை விற்றுள்ளார் என்றும், அவரது குழந்தைகள் அதை விரும்பவில்லை என்பது தெரியவந்தது. அத்துடன் மகள் காதலுக்கும் அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
போலீஸின் தொடர் விசாரணையில் சொத்துக்கும், காதலுக்கும் தடையாக இருந்த சுனில் குமாரை மகன், மகள், நண்பர்கள் இணைந்து கொலையை செய்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடைய இறந்தவரின் மகன் மற்றும் மகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.