முககவசம் அணியச் சொன்ன போலீஸார்! வளர்ப்பு நாயை ஏவிவிட்ட கடைக்காரர்!

dog 2 - 2026

முகக்கவசம் அணியாததற்கு அபராதம் போட்ட போலீஸார் மீதுள்ள கோவத்தில் மளிகைக்கடைக்காரர் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

43 வயதான சத்யநாராயண் குப்தா என்ற நபர் ஒருவர் மகாராஷ்டிராவில் உள்ள கம்பல்பாடா பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பொதுமுடக்கத்துக்கு நிகரான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.

இதனால் அங்கு மளிகை கடைகள், பால்கடைகள், காய்கறிக்கடைகள் என அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மட்டும் காலை 7 மணியிலிருந்து காலை 11 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதி வழங்கபட்டுள்ளது.

ஆனால், சத்யநாராயண் குப்தா காலை 11 மணிக்கு மேல் கடையை திறந்து வைத்தது மட்டும் இல்லாமல், முகக்கவசமும் அணியாமல் கடைக்கு வெளியில் இரண்டு ஊழியர்களுடன் அமர்ந்திருந்துள்ளார்.

அதை பார்த்த போலீசார் ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேட்டு, மேலும் மூன்று பேருக்கும் சேர்த்து ரூ.1500 அபராதம் விதித்தனர். ஆனால் குப்தா என்னால் அபராதம் கொடுக்க முடியாது என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

இதனால் ஆத்திரமடைந்த குப்தா தான் வளர்த்துவந்த இரண்டு நாய்கள் அருகில் நின்று கொண்டிருப்பதை கவனித்து, அதை அபராதம் போட்ட போலீசாரை பழிவாங்க தனது நாய்களை போலீஸார் மீது ஏவிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அந்த இரண்டு நாய்களும் அங்கிருந்த போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை பார்த்து குரைத்துள்ளது.

மேலும், அதில் ஒரு நாய் அங்கிருந்த போலீஸ் ஒருவரை கடித்தத்தில் அவர் படுகாயம் அடைந்துள்ளதை அடுத்து, உடனடியாக அவரை மருந்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து, போலீஸார் குப்தாவையும், அவரது ஊழியர் ஆனந்த்தையும் கைது செய்த நிலையில், மற்றொரு ஊழியரான ஆதித்யா தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட குப்தா இதை குறித்து பேசிய போது, அவர் என்ன மாஸ்க் போட சொன்னது கோவம் வந்துருச்சு அதுவும் போடாததுக்கு அபராதம் வேற கேட்டாரு அதான் ரொம்ப கோவம் வந்துருச்சு, என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories