December 6, 2025, 1:54 PM
29 C
Chennai

நதியில் தவறி விழுந்த மாணவன்! 8 நாட்கள்.. சடலமாக மீட்பு!

river
river

லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் ஒரு வாரத்திற்கு முன்பு தவறி விழுந்த 13 வயது பள்ளி மாணவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லண்டனில் கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி ஆர்க் குளோப் அகாதமி பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சீருடைகளுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது டவர் பாலத்திலிருந்து எதிர்பாராதவிதமாக தவறி அந்த சிறுவன் தேம்ஸ் நதியில் விழுந்துவிட்டார். இதையடுத்து லண்டன் காவல்துறையினருக்கு அந்த நதியில் விழுந்தது யார் ? என்று தெரியாது. எனவே அவர்கள் காணாமல் போன வழக்கில் பதிவு செய்திருந்தனர்.

மேலும் அதே நாளில் அந்த சிறுவனுடைய பள்ளி முதல்வர் அந்த சிறுவனை காணவில்லை என்று புகார் அளித்ததையடுத்து நதியில் விழுந்தது அந்த மாணவனாக இருக்கலாம் என்று காவல்துறையினர் முடிவு செய்தனர்.

மேலும் அந்த சிறுவன் நதியில் விழுந்த போது அவரைக் காப்பாற்ற பெண் ஒருவர் அந்த நதியில் குதித்ததாகவும் ஆனால் அவரால் சிறுவனுடைய புத்தகப்பை மற்றும் ஸ்கூல் ஜாக்கெட்டை மட்டுமே மீட்க முடிந்ததாகவும் சாட்சிகள் தெரிவித்துள்ளன.

அதனை தொடர்ந்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களை கொண்டு அந்த மாணவனை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக அந்த சிறுவன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஏப்ரல் 28-ஆம் தேதி பிற்பகலில் ரோதெரஹிதே சுரங்கம் அருகே அழுகிய நிலையில் ஒரு சடலம் கிடந்துள்ளது. அதன்பின் அது அந்த 13 வயது பள்ளி மாணவனாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் காவல்துறையினர் அந்த மாணவன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று காலையில் பள்ளிக்கு சென்ற மாணவன் 8 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories