தில்லி மாணவி பலாத்காரம் குறித்த ஆவணப் படத்தை வெளியிடத் தடை

Published:

புது தில்லி: தில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரக் குற்றவாளியிடம் எடுக்கப்பட்ட பேட்டியுடன் கூடிய ஆவணப் படத்தை ஊடகங்களில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியிடம் பிரிட்டன் ஆவணப் பட தயாரிப்பாளர் ஒரு பேட்டி எடுத்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில், அந்த ஆவணப் படத்தில் கருத்துகள் இடம்பெற்றிருப்பதால், இந்த ஆவணப் படத்தை ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என டிவி சேனல்களுக்கு மத்திய ஒளிபரப்பு த்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img