December 6, 2025, 6:20 PM
26.8 C
Chennai

கவச உடையால் கசகசத்த உடல்! மருத்துவர் வேண்டுகோள்!

doctor
doctor

குஜராத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

எனினும் தன்னலமற்ற மருத்துவர்கள் இரவு, பகல் பாராமல், சுட்டெரிக்கும் கோடை காலத்தில் பாலித்தீனில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு கவச உடையை அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பாதுகாப்பு கவச உடை அணிந்திருக்கும்போது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல், உணவு சாப்பிட முடியாமல், தாகத்துக்கு தண்ணீர் கூட குடிக்க முடியாமல் மருத்துவர்கள், செவிலியர்கள் சொல்லொண்ணா துயரம் அடைந்து வருகின்றனர்.

குஜராத்தின் பதான் அருகே தார்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் மருத்துவர் சோகில் மக்வானா கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

தற்போது அவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். பாதுகாப்பு கவச உடையை கழற்றியபிறகு வியர்வையில் நனைந்திருக்கும் புகைப்படத்தை அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதோடு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து சில பதிவுகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

“மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் அனைவரின் சார்பாக மக்களோடு பேசுகிறேன். எங்கள் குடும்பத்தை பிரிந்து நோயாளிகளுக்கு சேவையாற்றி வருகிறோம். நோயாளிகளுக்கு மிக அருகில் நின்று சிகிச்சை அளிக்கிறோம்.

எங்களது வேதனை,துன்பங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்” என்று மருத்துவர் சோகில் மக்வானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories