April 28, 2025, 8:16 AM
28.9 C
Chennai

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை‌ கொன்று துண்டாக்கி எரித்த மனைவி!

mumbai 2
mumbai 2

மும்பையில் கணவரை கள்ளக்காதலன் உதவியுடன் கொன்றுவிட்டு உடலை 3 பகுதிகளாக வெட்டி சமையலறையில் எரித்த பெண் கைது செய்யப்பட்டார். அவரது 6 வயது குழந்தை காட்டிக் கொடுத்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவை சேர்ந்தவர் ரயீஸ் ஷேக். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஷாஹிதா ஷேக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பணி நிமித்தமாக இருவரும் மும்பையில் குடியேறினர்.

இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தையும் 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த மே 25 ஆம் தேதி ஷாஹிதா தாஹிசார் காவல் நிலையத்திற்கு கடந்த 21-ஆம் தேதி வீட்டை விட்டு சென்ற கணவரை காணவில்லை என புகார் கொடுத்தார். அவர் வீட்டை விட்டு சென்றதிலிருந்தே அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

mumbai3
mumbai3

இந்த புகாரை வைத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரயீஸை தேடி வந்தனர். கடந்த 25 ஆம் தேதி ரயீஸின் சகோதரர் அனீஸ் மும்பை சென்றுள்ளார்.

ALSO READ:  சாம்பியன்ஸ் ட்ராபி: கிங் கோலி அடித்த சதம்! பாகிஸ்தானை வென்று பலம் சேர்த்த இந்திய அணி!

அவர் நேராக தாஹிசார் காவல் நிலையத்திற்கு சென்று, தனது அண்ணி அவ்வப்போது அவரது வாக்குமூலத்தை மாற்றி வருகிறார் என தெரிவித்தார்.

இதனால் ஷாஹிதா மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. இவர் எதையோ மறைக்கிறார் என்பதை போலீஸார் உணர்ந்தனர். நேற்று முன் தினம் ரயீஸின் வீட்டிற்கு போலீஸார் வந்தனர்.

mumbai1
mumbai1

அப்போது வீட்டை சோதனையிட்டனர். சமையலறையில் உள்ள டைல்ஸ்கள் சரிவர இல்லை, மேலும் சில டைல்ஸ்கள் காணாமல் போயிருந்தன.

பின்னர் தாஹிதாவிடம் போலீஸார் துருவி துருவி விசாரித்தவுடன் தனது கள்ளக்காதலன் அமித் மிஸ்ராவுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டு அவரது உடலை எரித்து விட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

இதுகுறித்து ஷாஹிதாவின் 6 வயது பெண் குழந்தையும் , அம்மா செய்ததை தான் கண்ணால் பார்த்ததாக தெரிவித்தது.

மேலும் இந்த உண்மையை வெளியே சொன்னால் அப்பாவை எரித்தது போல் உன்னையும் எரித்துவிடுவதாக அம்மா மிரட்டியதாகவும் அந்த 6 வயது குழந்தை தெரிவித்தது.

mumbai
mumbai

இதையடுத்து ஷாஹிதாவிடம் விசாரணை நடத்தியதில் தனக்கு பக்கத்து வீட்டுக்காரர் அமித் மிஸ்ராவுடன் கள்ளக்காதல் இருந்தது.

ALSO READ:  IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

இது கணவர் ரயீஸுக்கு தெரியவந்து கள்ளக்காதலை உடனடியாக நிறுத்துமாறு கண்டித்தார். இதையடுத்து கடந்த மே 22 ஆம் தேதி கணவர் ரயீஸை தானும் அமித்தும் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் அதை 6 வயது குழந்தை பார்த்துவிட்டதால் அவரது உடலை மூன்று பகுதிகளாக வெட்டி சமையலறையில் வைத்து எரித்ததாக ஷாஹிதா கூறியதை அடுத்து அவரையும் அமித்தையும் போலீஸார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories