December 6, 2025, 1:23 AM
26 C
Chennai

எல்லா நாட்களிலும் இந்த சேவை: ரிசர்வ் வங்கி!

RBI-Governor-Shaktikanta-Das
RBI-Governor-Shaktikanta-Das

தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (NACH) அமைப்பு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த முறை ஆகஸ்ட் 1 முதல் இந்த முறை செயல்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். இதன் மூலம் இப்போது வங்கிகளின் விடுமுறை நாட்களிலும் உங்கள் வங்கி கணக்கிற்கு சம்பளம் வரும், உங்கள் இ.எம்.ஐ யும் நீங்கள் டெபாசிட் செய்யலாம்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் பணவியல் கொள்கைக் குழுவின் மதிப்பீட்டை குறித்து பேசும் போது இந்த மாற்றத்தை அறிவித்தார்.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக தற்போதுள்ள முறையை மாற்றியமைத்து வருவதாக அவர் கூறினார். NACH என்பது ஒரு ஆன்லைன் கட்டண முறையாகும், இது மொத்தமாக செலுத்த பயன்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

Rbinote
Rbinote

ரிசர்வ் வங்கியின் இந்த மாற்றத்தை செயல்படுத்துவதன் மூலம், மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி, வீடு, கார் மற்றும் தனிநபர் கடன் இஎம்ஐ, தொலைபேசி உட்பட அனைத்து பில்களும் வங்கி விடுமுறை நாட்களில் கூட உங்கள் கணக்கிலிருந்து செலுத்தலாம்.

இதற்காக, தேவையான கட்டணத்திற்கு உங்கள் வங்கிக் கணக்கில் போதுமான நிலுவை வைத்திருக்க வேண்டும். இது தவிர, வங்கி விடுமுறை இருந்தபோதிலும், உங்கள் சம்பளம் உங்கள் கணக்கில் வரும்.

ஒரே நேரத்தில் பல நபர்களின் கணக்குகளுக்கு பணம் அனுப்ப NACH அமைப்பு பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த முறை ஈவுத்தொகை, வட்டி, சம்பளம், ஓய்வூதியம் போன்ற மொத்தமாக செலுத்த பயன்படுத்தப்படுகிறது.

பரஸ்பர நிதிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆல் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories