காதலியை அடைத்து வைத்து சித்திரவதை!

woman - 2026

2020 ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததிலிருந்து வீட்டு வன்முறை வழக்குகள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர்..

அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் கொச்சியில் அரங்கேறி உள்ளது.. இதில் ஒரு பெண் தனது காதலரால் பல கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தார். கேரள மாநில கண்ணூரில் மார்ட்டின் ஜோசப் (33), பங்கு வர்த்தகராக உள்ளார்.

இவர் கடந்த ஆண்டு லாக்டவுன் போடப்பட்டது முதல் 27 வயதான பெண் ஒருவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவில் இருந்து வந்துள்ளார். ஆனால் தொடர்ச்சியான தாக்குதல் மற்றும் வன்முறை காரணமாக அந்த பெண் மீண்டும் தனது வீட்டிற்கே சென்று விட்டார்.

ஆனால் அந்த பெண் திரும்பி வராவிட்டால் நிர்வாண வீடியோக்களை இணையத்தில் கசியவிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் மீண்டும் வந்தார்.. ஆனால் அந்த பெண்ணை மீண்டும் அடித்து துன்புறுத்தியதுடன், சிறுநீரை குடிக்க வைத்து வற்புறுத்தி கொடுமைப்படுத்தி உள்ளார்.

தனக்கு நடந்த கொடூரத்தை விவரித்த அவர் ” என்னை படுக்கையில் கட்டிவைத்து துடைப்பம், மற்றும் பெல்ட்டால் அடித்தார். அவர் தொடர்ந்து அதே பகுதிகளில் என்னை அடிப்பார். சிறுநீர், கழிப்பறையிலிருந்து தண்ணீரையும் குடிக்க வைத்தார். என்னை தூங்கவிடாமல் தடுக்க, என் காயங்களின் மேல் சூடான நீரை ஊற்றுவார். அவர் என் கண்களில் மிளகாய் தூள் கலந்த தண்ணீரை தெளிப்பார்” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து ஒருவழியாக அவர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பி விட்டார். நேராக காவல் நிலையத்திற்கு சென்ற அவர், தன்னை ஜோசப் பின்தொடர்ந்தார் என்று பயந்து, அப்போது அவர் புகார் கொடுக்கவில்லை, ஆனால் ஒரு மாதம் கழித்து ஜோசப் மீது அவர் காவல்துறையில் புகாரளித்தார்.

ஏப்ரல் 8 ம் தேதி கொச்சி போலீசாரால் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், பிப்ரவரி 15 முதல் மார்ச் 8 வரை மார்ட்டினால் தான் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறினார், அந்த சமயத்தில் அவர் தன்னை சித்திரவதை செய்ததாகவும். அந்த புகாரின் அடிப்படையில், ஜோசப் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எனினும் இந்த புகார் அளித்தும் ஒரு மாதழித்து, இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளியை கைது செய்ய ஒரு தனிப்ப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அந்த நபரை கைது செய்வார்கள் என்றும் கொச்சி காவல்துறை கமிஷ்னர் நாகராஜு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

Topics

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories