April 18, 2025, 1:09 PM
34.2 C
Chennai

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள குரூப் சி பணி!

airforce an32
airforce an32

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்

இந்திய பாதுகாப்புப் படைகளின் ஒரு அங்கமாக விமானப்படை இயங்கிவருகிறது.

இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.

விமானப்படையின் கீழ் பல துறைகள் செயல்பட்டுவரும் நிலையில் தற்போது குரூப் சி யின் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விமானப்படையில் காலியாக உள்ள பணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள்:

பணி: MTS

காலிப்பணியிடம் : 17

தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒராண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Civilian Driver

காலிப்பணியிடம் : 45

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

ALSO READ:  IPL 2025: பெங்களூருவை சாய்த்த குஜராத் அணி!

விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதோடு வாகனத்தில் தீடிரென பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கான திறன் கொண்டவர்களாக விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும்.

பணி: COOK

காலிப்பணியிடம் : 5

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓராண்டு டிப்ளமோ கேட்டரிங் படித்திருக்க வேண்டும்.

பணி : LDC

கல்வித்தகுதி : பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் மற்றும் ஹிந்தியில் 30 வார்த்தைகள் டைப் செய்யும் அளவிற்கு திறன் கொண்டிருக்க வேண்டும்.

பணி : கார்பண்டர்

காலிப்பணியிடம்: 1

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்ப்பண்டர் பிரிவில் ஐடிஐ தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்

பணி : Fireman

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தீயணைப்புத்துறை வீரர்களுக்கான அடிப்படை பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதோடு நல்ல ஆரோக்கியமான உடற்தகுதி கொண்டிருக்க வேண்டும்.

பணி : superintendant

காலிப்பணியிடம் : 1

கல்வித்தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் ஏதாவதொரு ஒரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் http://www.davp.nic.in/writeReadData/ADS/Eng_10801_11_0019_2122b.pdf என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும். பின்னர் கேட்கப்பட்டிருக்கும் அனைத்துத் தகவல்களையும் பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ALSO READ:  Ind Vs Eng T20: அபிஷேக் சர்மாவிடம் தோற்ற இங்கிலாந்து அணி!

தேர்வு முறை : இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

சம்பளம் – இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஏழாவது சம்பளக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories