2வது முறையாக குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு !

gujarat cm takes oath - 2026

குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர ரஜினிகாந்த் படேல்(62) நேற்று (12.12.2022) பதவியேற்றார். அவருடன் 8 கேபினட் அமைச்சர்கள் உள்ளிட்ட 16 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 இடங்களைக் கைப்பற்றி, வரலாறு காணாத வெற்றி பெற்றது. ஏற்கெனவே 6 முறை ஆட்சி அமைத்துள்ள பாஜக, 7-வது முறையாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தது. இதையடுத்து, தலைநகர் காந்திநகரில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

திங்கள் கிழமை பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற்றது. குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர ரஜினிகாந்த் படேலுக்கு, ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து, 16 அமைச்சர்களும் பதவிஏற்றுக் கொண்டனர். இவர்களில் கனுபாய் தேசாய், ரிஷிகேஷ் படேல், ராகவ்ஜி படேல், பகவந்த்சிங் ராஜ்புத், குன்வாரிஜி பவாலியா, முலுபாய் பேரா, குபேர், பானுபென் பாபாரியா ஆகியோ்ர் கேபினட் அமைச்சர்கள் ஆவர்.

விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகளிர், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா கண்டு, திரிபுரா முதல்வர் மாணிக் சகா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.

முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்ற பிறகு மேடையில் எழுந்து நின்ற பிரதமர், சிரம் தாழ்த்தி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார் பல்வேறு மடங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆன்மிகத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். குஜராத் சட்டமன்ற தேர்தல் வெற்றி, 2024 நாடாளுமன்றத்திற்கான முன்னோடி வெற்றி என்று பதவியேற்பு விழாவில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர்.

gujarat cm bhupendra patel - 2026

படிப்படியாக உயர்ந்த குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்!

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் பிறந்த பூபேந்திர படேல், அம்மாநிலத்தின் பெரும்பான்மை மிக்க படேல் சமூகத்தைச் சேர்ந்தவர். சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பட்டயப்படிப்பு முடித்துள்ளார். எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் இவர், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை நெருங்கிய தொடர்பில் உள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதற்கு முன், உள்ளூர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள மேம்நகர் நகராட்சியின் தலைவராக இரு முறை பதவி வகித்துள்ளார்.முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேலுக்கு நெருக்கமாக இருந்த இவர், கடந்த 2017 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, 1.17 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில் குஜராத் முதல்வராக இவர் அறிவிக்கப்படும் வரை, ஆமதாபாதை தாண்டி கட்சியினர் மத்தியிலேயே அறியப்படாத முகமாக பூபேந்திர படேல் இருந்தார்.
இவர், கடந்த ஓராண்டாக ஆட்சியை வழிநடத்தி சென்ற விதத்தில் பா.ஜ.க தலைமைக்கு திருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது முறையாக முதல்வராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories