புது தில்லி: சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றுவது குறித்து, தமிழக அரசுடன் பேசி ஒரு முடிவு எடுக்கப் படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். நேற்று மத்திய நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பின்னர் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த்தார். அப்போது, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசுடன் பேசி முடிவு எடுக்கப்படும். வரும் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். வசதி படைத்தவர்கள் மானியத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஏழைகள் மட்டுமே மானியம் பெறவேண்டும். வரி ஏய்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். வரி செலுத்துவோரிடம் அதிக பணம் இருப்பதையே அரசு விரும்புகிறது. ராணுவத்தில் ஒரு பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை செயல்படுத்துவோம். – என்றார்.
சேது சமுத்திர திட்டம்- தமிழக அரசுடன் பேசி முடிவு எடுக்கப்பட்டும்: அருண் ஜேட்லி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari